Skip to main content

கிஷோர் கே.சாமி வழக்கு; காவல்துறை குறிப்பால் அதிர்ந்த நீதிபதி

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

Case of Kishore K. Samy;

 

சமூக ஊடகங்களில் மிகவும் இழிவாகவும் மலிவாகவும் எழுதுபவர் கிஷோர் கே. சாமி. தி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சித் தலைவர்களையும், ஊடகத்தில் பணியாற்றும் பெண்களையும் மற்ற பெண்களையும் மிக மோசமாகப் பதிவிட்டு வருபவர். ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்.

 

அண்மையில், கோவை கார் சிலிண்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக மத மோதலை உருவாக்கும் விதத்தில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்த கிஷோர் கே. சாமிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் முன்ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை கடந்த 15-11-2022 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அமர்வில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர், “கிஷோர் கே. சாமி மீது இதுவரை எந்த குற்ற வழக்கும் இல்லை” என்று கோவை காவல்துறை அளித்த ஆவணங்கள் வாயிலாகத் தெரிவித்திருக்கிறார். நீதிபதியே அதிர்ச்சியடைந்து, “பேப்பர் படிப்பதில்லையா, நியூஸ் பார்ப்பதில்லையா?” எனக் கேட்டிருக்கிறார். கோவையில் இதுவரை அவர் மீது வழக்கு இல்லை என்கிற காவல்துறையின் கருத்தை கோர்ட்டில் தெரிவித்த அரசு வழக்கறிஞர், “அவர் மீது நிறைய வழக்குகள் இருப்பதை நானும் அறிவேன், ஆனால் காவல்துறையினர் அவர் மீது வழக்குகள் இல்லை என எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்துள்ளனர். அனைத்து வழக்கின் முழு விவரங்களை உயர் அதிகாரிகளிடம் பேசி நீதிமன்றத்திற்கு அளிப்பதற்காகவே  நாளை மறுநாள் வழக்கை விசாரிக்க வாய்தா கேட்கிறேன்” என்றார். உடனே நீதிபதி இந்த வழக்கை 18.11.2022 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 

இந்நிலையில், 17-11-2022 அன்று ஜாமீன், முன்ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வருகிற நீதிமன்றத்தில் ஏற்கனவே ஆஜராகிற வழக்கறிஞர் மாற்றப்பட்டுக்  கூடுதல் அரசு வழக்கறிஞர் ராஜ்குமார் ஆஜரானார். இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன?


நவம்பர் 15 அன்று கோர்ட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து அறிந்த அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அன்று மாலையே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு வழக்கறிஞரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார். 


அப்போது, “காவல் துறையினர் வழங்கிய குறிப்பினைத்தான் நீதிமன்றத்தில் தெரிவித்தேன், கிஷோர் கே. சாமி மீது பல வழக்குகள் இருப்பது தனக்குத் தெரிந்ததால்தான் முழு விவரங்களை உயரதிகாரிகளிடம் பெற டைம் வாங்கினேன்” எனத் தெரிவித்திருக்கிறார். “காவல்துறையினர் சொல்வதை அப்படியே நீதிமன்றத்தில் தெரிவிப்பது அரசு வழக்கறிஞரின் பணி அல்ல. அவர்கள் சொல்வது சரியாக இருக்கிறதா வழக்கு கோப்பில் அதுகுறித்த விவரங்கள் இருக்கிறதா என்பதை எல்லாம் ஆராய்ந்து தான் அதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்” எனச் சொல்லி கவனக்குறைவாக இருந்ததற்காக அவரை நீக்கிவிட்டுக் கூடுதல் அரசு குற்றத்துறை வழக்கறிஞர் ராஜ்குமாரை அந்த நீதிமன்றத்திற்கு நியமித்திருக்கிறார் அசன் முகம்மது ஜின்னா. அதனால்  இன்று முதல் கூடுதல் குற்றத்துறை அரசு வழக்கறிஞர் ராஜ்குமார், ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் காவல்துறையின் சார்பில் ஆஜராகிறார். இந்த அதிரடி நடவடிக்கை வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.


மேலும், நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்த காவல் அதிகாரியிடம் விளக்கம் கேட்க அறிவுறுத்தி கோவை போலீஸ் கமிஷனருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார் மாநிலத் தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.