Skip to main content

திமுக ஐடி விங்க் பொறுப்பாளர் மீது அவதூறு வழக்கு! திமுக ந.செ. புகார் மனு நிராகரிப்பு!!!

Published on 23/04/2020 | Edited on 24/04/2020

கரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் வேலையின்றி வருமானம் இல்லாமல் உணவுக்காக அவதிப்படும் மக்களுக்கு தன்னார்வலர்கள் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்த உதவிகளை நேரடியாக செய்யக்கூடாது என்று அரசு சொன்னாலும் பிறகு அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.

 

Case against DMK IT Wing guardian



இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி திமுக எம்எல்ஏவும், தெற்கு மாவட்ட செயலாளரும் பொறுப்பாளருமான முன்னாள் அமைச்சர் எஸ். ரகுபதி உள்ளிட்ட திமுகவினர் பொன்னமராவதி வட்டாட்சியரிடம் 200 நிவாரண பைகளை கொடுத்து ஏழை மக்களுக்கு வழங்க கொடுத்தனர்.
 

nakkheeran app



நிவாரண பொருட்களைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் அடுத்த நாளே நிவாரணம் வழங்க அதிமுக மாவட்ட செயலாளரும் வாரியத் தலைவருமான வைரமுத்துவை வைத்து, திமுகவினர் வழங்கிய நிவாரண பைகளை வழங்க வைத்தனர். இதைப் பார்த்த திமுக தொழில்நுட்ப பிரிவினர் குழந்தை பிறப்பும் இன்சியலும் என்றும் பல கருத்துகளை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்திருந்தனர். இதைப்பார்த்த அதிமுகவினர் எதிர் விமர்சனம் செய்தனர். 

 

Case against DMK IT Wing guardian



இந்த நிலையில்தான் திமுக தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் இளையராஜா மீது கே.புதப்பட்டியில் அதிமுகவினர் கொடுத்த புகாரின் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து இளையராஜாவை தேடி வருகின்றனர். இந்த புகாரையடுத்து எங்க கட்சித் தலைவர்களை பற்றி சமூக வலைதளங்களில் இழிவாக பதிவுகள் போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் மீது அரிமளம் காவல்நிலையத்தில் திமுக பேரூர் செயலாளர் நாசர் கொடுத்த புகாரை போலீசார் வாங்கவில்லை. அதனால் காவல் உயர் அதிகாரிகளுக்கு மெயில் மூலம் புகார் அனுப்பியுள்ளார்.

இது குறித்து மாவட்ட செயலாளர் ரகுபதி எம்எல்ஏ கூறுகையில் "நாங்கள் கொடுத்த நிவாரண பொருட்களை அதிமுகவினர் கொண்டு போய் கொடுப்பது நியாயமா? எங்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் திமுக தலைவர்கள் மிது அவதூறு மீம்ஸ்கள் பதிவிட்டவர்கள் மீது நடடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏனோ? என கேள்வி எழுப்பினார். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுவருகிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.