Skip to main content

கார் டயர் வெடித்து டூவீலர் மீது மோதி பயங்கர விபத்து... இரண்டு மாணவிகள் உட்பட மூவர் பலி!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

Car tire explodes and crashes into two-wheeler: Three killed, including two students!

 

நெல்லையின் நான்கு வழிச்சாலையில் இன்று (04/12/2021) காலை 10.30 மணியளவில் நாகர்கோவிலிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் செல்லும் கார் ஒன்று விரைந்துவந்திருக்கிறது. அது சமயம் நான்கு வழிச்சாலையின் எதிரே ரெட்டியார்பட்டி விலக்கு அருகே இரண்டு பேர் டூவீலரில் வந்திருக்கிறார்கள். அந்த நேரம் எதிர்பாராத விதமாக டயர் வெடித்ததில் நிலைகுலைந்த கார், வந்த வேகத்தில் பக்கத்திலுள்ள தடுப்புச் சுவரையும் தாண்டி எதிரே வந்த டூவீலர் மீது மோதியதில், அதில் வந்த இரண்டு இளம்பெண்களும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கின்றனர். காரை ஒட்டிவந்தவர் படுகாயமடைந்திருக்கிறார். அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது அவரது உயிர் பிரிந்திருக்கிறதாகத் தெரிகிறது.

Car tire explodes and crashes into two-wheeler: Three killed, including two students!

 

தகவலறிந்த பெருமாள்புரம் காவல்துறையினர், மாநகர காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் ஆகியோர் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விசாரணை மேற்கொண்டதில் டூவீலரில் வந்தவர்கள், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் 4ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பயிலும் மாணவிகளான திவ்ய காயத்ரி பொன் மற்றும் பிரிடா ஏஞ்சலின் ராணி என்பது தெரியவந்துள்ளது. இந்த இரண்டு மருத்துவ பயிற்சி மாணவிகளும் ரெட்டியார்பட்டியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ பணி நிமித்தம் சென்றதாகத் தெரிகிறது. அது சமயம் விபத்து நடந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், படுகாயமடைந்த டிரைவர் சண்முகசுந்தரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்திருக்கிறார் என்கிறார்கள்.

 

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.