Skip to main content

பணத்துடன் மாயமான ஓபிஎஸ் ஆதரவாளரின் கார் ஓட்டுநர்... மடக்கிப்பிடித்த காவல்துறை!

Published on 05/09/2022 | Edited on 05/09/2022

 

The car driver of the mysterious OPS supporter with 50 lakhs... police caught!

 

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் நாராயணன். இவர் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை நடத்தி வருகிறார். அதோடு ஓபிஎஸ் ஆதரவாளர்களில் ஒருவராக இருந்து கொண்டு தேனி மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையின் செயலாளராகவும் இருந்து வருகிறார்.

 

இவரின் கார் ஓட்டுநராக பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் பணிபுரிந்து வருகிறார். உசிலம்பட்டியிலிருந்து நாராயணன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர்  நண்பர் ஒருவருடன் 50 லட்சம் பணத்துடன் பெரியகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஆண்டிபட்டியில் நாராயணன் ஸ்ரீதரிடம் காரில் உள்ள 50 லட்சம் பணத்தை தனது வீட்டில் ஒப்படைக்குமாறு கூறிவிட்டு தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கானின் காரில் ஏறி  பெரியகுளம் நோக்கி வந்துள்ளார்.

 

இந்த நிலையில் ஸ்ரீதர் 50 லட்சம் பணத்துடன் மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த நாராயணன் பல இடங்களில் தேடிப்பார்த்தும் ஸ்ரீதரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். மேலும் தனது கணவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என்றும், அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், ஸ்ரீதரின் மனைவி கங்கம்மாளும் பெரியகுளம் வடகரை போலீஸ் ஸ்டேஷன் புகார் கொடுத்தும் இருக்கிறார்.

 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பணத்துடன் மாயமான ஸ்ரீதரை தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் டிரைவர் ஸ்ரீதரை மடக்கிப்பிடித்து கைது செய்து அதிரடி விசாரணையும் நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.