Skip to main content

தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

Car collides with private bus, two loss their live

 

புதுக்கோட்டை அருகே தனியார் பேருந்து மீது கார் மோதிய  கொடூர விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் காவல் நிலையம் அருகே உள்ள திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த தனியார் பேருந்தும், புதுக்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்தானது. கார் நேருக்கு நேர் மோதியதில் பேருந்துக்கு அடியில் கார் சிக்கி நொறுங்கியது. இதில் காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற நமணசமுத்திரம் காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து பேருந்துக்கு அடியில் சிக்கிய காரை மீட்டு காரில் இருந்த சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை மீட்டனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவத்தால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காரில் வந்தவர்கள் விவரம், எங்கிருந்து வந்தார்கள் என்பது தொடர்பாக நமணசமுத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரி விபத்து 

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Sand truck accident on National Highway

 

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டாவில் இருந்து சென்னைக்கு மணல் ஏற்றிக்கொண்டு சென்ற டிப்பர் லாரி கொணவட்டம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பாரம் தாங்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் குறுக்கே உள்ள சென்டர் மீடியம் கம்பியில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் லாரியில் இருந்த மணல், சாலையின் இடையே சிதறியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை போலீசார் மற்றும் மணல் ஏற்றி வந்த லாரி உரிமையாளர்கள் மணலை ஜேசிபி மூலம் அள்ளி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

 

இந்த விபத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கு மேலாகக் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

'மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்' - புதுக்கோட்டை மீனவர்களுக்கு எச்சரிக்கை

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

'Do not go to the sea until further notice'-Pudhukottai fishermen warned

 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

அதேபோல் டிசம்பர்.1, 2, 3 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கரூர், வேலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தேனி, மதுரை ஆகிய 28 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், புதுக்கோட்டை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  மோசமான வானிலையால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். மீனவர்கள் தங்கள் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்