Skip to main content

நாங்குநேரி இடைத்தேர்தலில் பணபலம் வெல்ல முடியாது - கே.எஸ்.அழகிரி பேட்டி!

Published on 22/09/2019 | Edited on 22/09/2019

தமிழகத்தில் நாங்குநேரியில் நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பணபலம் வெல்லமுடியாது மக்களுக்கான சேவையும் உழைப்பு மட்டுமே வெற்றி பெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.அழகிரி கூறியுள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மாபெரும் பாதயாத்திரை நடத்தப்பட உள்ளது என்றார்.

 

 Can't win money in Nankuneri by-election - Interview with KS Alagiri!

 

மகாத்மா காந்தி அனைவருக்கும் சொந்தமானவர் என்றபோதிலும் யாருக்கு யார் விழா எடுக்க வேண்டும் என்று ஒரு வரைமுறை உள்ளது என்று அவர் கூறினார். தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகளில் செய்ய முடியாத பல காரியங்களை ஒரே மாதத்தில் செய்துள்ளனர். அஞ்சல் துறை மற்றும் ரயில்வே துறை தேர்வை தமிழில் தேர்வு எழுத வேண்டியதில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பை தங்களது இப்போராட்டத்தின் மூலமாக தகர்த்தெறிந்து இன்று தமிழக இளைஞர்கள் தமிழில் தேர்வு எழுதியதன் காரணமாக ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்திய நாடாளுமன்றத்திலேயே தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் தான் மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் பெரும் பெருமிதம் கொண்டார்.

தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெறமுடியாமல் தமிழக அரசு உள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார், தமிழக அரசு செயல்பாடுகளை இழந்து விட்டது. இந்திய நாடு பல்வேறு பொருளாதார சரிவை சந்தித்து கொண்டுள்ளது. பல லட்சம் தொழிலாளர்கள் மோட்டார் வாகன துறையில் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். ஒரு தனியார் பிஸ்கட் தொழிற்சாலை மூடப்பட்டதன் காரணமாக 10 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். கோவையில் முன்னணி உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாகும் என்று கூறிய பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் விவசாய உற்பத்தி இரண்டு சதவீதம் குறைந்துள்ளது. தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு மாறாக கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படும் வகையில் வரியை குறைத்துள்ளது பிறருக்கு எந்தவித லாபமும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றி ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியாக அமையும் என்று கூறினார். தமிழக அரசு தொழிற்சாலைகளுக்கு தேவையான உதவியை செய்யவில்லை என்பதன் காரணமாகவே  தமிழகத்தில் செயல்பட்டு வருகின்ற பல்வேறு மோட்டார் வாகனத்துறை இரண்டாவது கட்ட மேம்பாட்டு பணிகளை தமிழகத்தில் தொடங்காமல் பிற மாநிலங்களில் தொடங்க முன் வருகிறது. என்று அவர் குற்றம் சாட்டினார். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இல்லாத தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ள வெளிநாடு செல்லவேண்டும் அதற்கு மாறாக இவர்கள் வெளிநாடு சென்று வருவது மக்களை திசை திருப்பும் முயற்சி ஆகும் என்று அவர் கூறினார். நாங்குநேரி இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை அழைப்போம் என்று அவர் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து...” - மல்லிகார்ஜுன கார்கே உறுதி!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
State status for Puducherry Mallikarjuna Karke confirmed

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே போன்று புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று (15.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. நாங்கள் என்ன வாக்குறுதி, சொன்னாலும் செய்வோம். ஆனால் பிரதமர் மோடி செய்ய மாட்டார். இதனை காங்கிரஸும், ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மட்டுமே செய்ய முடியும்.

புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூட இடம் பெறவில்லை. நேற்று வெளியான தேர்தல் அறிக்கை புதுச்சேரி மக்களின் எதிர்ப்பார்ப்புகளை அப்பட்டமாக புறக்கணித்துள்ளது. 2024 தேர்தலில் இந்தியக் கூட்டணி வெற்றி பெற்ற பிறகு வாக்குறுதியளித்ததை நாங்கள் நிறைவேற்றுவோம் என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் மூடப்பட்ட ஆலைகள் ரேஷன் கடைகள் திறக்கப்படும்” எனப் பேசினார். 

Next Story

“ஜூம்லா நாடகத்தை மீண்டும் அரங்கேற்றியிருக்கிறது பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கை” - செல்வப்பெருந்தகை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
TN Congress leader Selvaperunthagai has slammed BJP election manifesto

டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார். அதில், பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் அமல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாகச் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜூம்லா நாடகத்தை மீண்டும் பா.ஜ.க. அரங்கேற்றியிருக்கிறது. 2014, 2019 ஆகிய தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க. 2024 தேர்தலுக்கு முதல்கட்ட தேர்தல் தொடங்கி அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு அவற்றைப் பார்த்து இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை சமூகநீதி, மதநல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு அம்சங்கள் உள்ளன.

பல்வேறு மதம், மொழி, ஜாதி, இனங்களை கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்வது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாகும். தற்போது நடைபெறுகின்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 இல் ஆரம்பித்து ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படுகிற நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தலை எப்படி நடத்த முடியும் என்பதை பிரதமர் மோடி தான் விளக்க வேண்டும்.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களை அழைக்காமல் புறக்கணித்த பா.ஜ.க.வினர் 2025 ஆம் ஆண்டை பழங்குடியினர் ஆண்டாக கொண்டாடுவோம் என்பது அப்பட்டமான இரட்டை வேடமாகும். ஏற்கெனவே ஆயுஷ்மான் திட்டத்தில் ஊழல் புரையோடிப் போயிருக்கிற நேரத்தில் மீண்டும் அத்திட்டம் குறித்து தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும் என்று தேர்தல் அறிக்கை கூறுகிறது. நிதி ஒதுக்குவதில் தமிழ் மொழியை விட 18 மடங்கு அதிகமாக சமஸ்கிருத மொழிக்கு நிதி ஒதுக்கி பாரபட்சம் காட்டுகிற பா.ஜ.க., தமிழ் மொழி வளர்ச்சி பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. இதன்மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. தேர்தல் நன்கொடை பத்திரம் மூலமாக ரூபாய் 8,000 கோடி கார்ப்பரேட்டுகளிடம் நிதியைப் பெற்று குவித்த பா.ஜ.க., ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது மிகுந்த கேலிக்குரியதாக இருக்கிறது.

வந்தேபாரத் ரயில், புல்லட் ரயில் இவை எதுவுமே சாதாரண மக்களுக்கு பயன்படுகிற வகையில் அமைவதில்லை. தமிழகத்தில் மெட்ரோ ரயிலை புறக்கணித்த பா.ஜ.க.வை எவரும் மறந்திட இயலாது. மோடியின் உத்திரவாதம் நம்பகத் தன்மையை இழந்துள்ளது. ஏற்கனவே 2014 இல் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டப்படும், கருப்பு பணத்தை ஒழித்து அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற உத்திரவாதத்தை நிறைவேற்றாத மோடியின் உத்திரவாதத்தை மக்கள் எவரும் நம்ப மாட்டார்கள்.

தேர்தல் அறிக்கையை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை ஜாதிவாரியாக கணக்கெடுத்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்காத பா.ஜ.க., டாக்டர் அம்பேத்கர் பெயரை உச்சரிக்கத் தகுதியில்லை.

எனவே, மக்களின் நம்பகத்தன்மையை இழந்த பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது. இதில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகள் எதையும் பா.ஜ.க. கூறவில்லை. இந்த தேர்தல் அறிக்கையை நாட்டு மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள்.

கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நிகழ்த்திய ஜூம்லா நாடகத்தை மீண்டும் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு அரங்கேற்றியிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.