Skip to main content

ஆற்றின் நடுவே அமைக்கப்படும் கழிவுநீர்க் கால்வாய்... அதிர்ச்சியில் கரூர் மக்கள்!

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

Canal to drain waste water in the middle of the river in Karur ...!


கரூரில் உள்ள அமராவதி ஆற்றில் சாக்கடை கழிவு நீரை எடுத்துச் செல்ல பொக்லைன் உதவியுடன் தனியாகக் கால்வாய்த் தோண்டுவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


கரூர் நகராட்சிக்கு உட்பட்ட நகரப் பகுதிகளிலேயே அமராவதி ஆறு ஒடுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. அதன் பிறகு நீர் வரத்துச் சுத்தமாக நின்று போனதாலும், குடியிருப்புகள் அதிகரித்ததாலும் கழிவுநீர், அமராவதி ஆற்றில் கலந்து ஆறு பாழாகிவிட்டது. 

 

இந்த நிலையில், அமராவதி ஆற்றின் வடக்குப் பகுதியில் சின்னாண்டான் கோவில் பகுதியில் இருந்து லைட்ஹவுஸ் கார்னர் நோக்கி, மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பொக்லைன் இயந்திரம் மூலக் சுமார் 15 அடி அகலத்திற்குக் கடந்த 2 நாட்களாக கால்வாய் தோண்டப்பட்டு வருகிறது. இது எதற்காகத் தோண்டப்படுகிறது என்று அப்பகுதியினர் கேட்டபோது, எந்தப் பதிலும் சொல்லாமல் பொக்லைன் ஓட்டுநர் ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக அப்பகுதியினர் கூறும்போது, வருவாய்த் துறைக்கும், பொதுப் பணித்துறைக்கும் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிகையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும், பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான ஆற்றில் சுமார் 15 அடி அகலத்தில் கால்வாய்த் தோண்டப்பட்டால், அதில் அதிகளவில் சாக்கடை நீர்தான் செல்லும். அவை மேடான பகுதி என்பதால், தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, ஓரிடத்தில் தேங்கி நிற்கும். அப்படி நின்றால், அதில் கொசு அதிகளவில் உற்பத்தி ஆவதுடன், ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் பள்ளமான அக்கரை பகுதியில் தான் செல்லும். அப்போது கால்வாயைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதால் இவற்றைத் தோண்டக் கூடாது என்றும், பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்து ஓட்டுநரைக் கைது செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் சித்ரவதை;3 பேர் மீது வழக்கு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
of female dancer; case against 3 people

பெண் நடனக் கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததோடு அரசியல் பிரமுகர்களுக்குப் பாலியல் ரீதியாக இணங்குமாறு கொடுமைப்படுத்தியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவருடைய தாயுடன் திருவிழாக்களில் நடனமாடும் தொழில் செய்து வந்தார். பல்வேறு குழுக்கள் இணைந்து நடனமாடி வந்த நிலையில், அண்மையில் கரூரைச் சேர்ந்த மதி என்பவருடைய நடனக் குழுவில் 22 வயதான அந்த பெண் இணைந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் திருவிழாக்களில் நடனமாடி வந்த நிலையில், அப்பெண்ணை பாலியல் ரீதியாக மதி வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அரசியல் கட்சியினர் சிலருக்கும் பாலியல் ரீதியாக இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்ததால் தனி அறையில் மூன்று நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணின் தாய் மகளைப் பார்க்க வந்தபொழுது சக நடனக் கலைஞர்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தியது உறுதியானது. அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் மதி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.

Next Story

இரத்தத்தில் கடிதம்! சிக்கலில் ஜோதிமணி

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Karur parliament constituency congress conflict  jothimani

நாடு முழுவதுமுள்ள கட்சிகள், பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மும்முரமாக செய்துவருகின்றன. பெரும்பாலான கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளன. யாருக்கு எந்த தொகுதி, எங்கெல்லாம் வேட்பாளர்களை மாற்ற வேண்டும், எப்படித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் கூட வரையறை செய்துவிட்டன.

இந்நிலையில், கரூர் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல், அகில இந்திய காங்கிரஸ் தலைமைவரை பரபரப்பை எகிற வைத்துள்ளது. இந்த பாராளுமன்றத் தொகுதியில், வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை போன்ற சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 1984 வரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வென்று வந்த இத்தொகுதியில், அதன்பின்னர், தி.மு.க., அ.தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் என மாறி மாறி வென்ற நிலையில், மீண்டும் 2019ல் காங்கிரஸ் கட்சி இத்தொகுதியில் வென்றுள்ளது.

கடந்த 2019ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி, 6 லட்சத்து 95 லட்சம் வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தம்பிதுரையை 4 லட்சம் வாக்கு கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில், வரவுள்ள தேர்தலில் ஜோதிமணிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த தேர்தலில் வெற்றிபெறச் செய்த கட்சிக்காரர்களுக்கு எவ்வித மதிப்பும் மரியாதையும் இவர் கொடுப்பதில்லை. இவரால் கட்சியிலிருந்து வெளியேறிய பல நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டனர். அவருடைய செயல்பாடுகள்தான் இப்படி இருக்கிறது என்றால், அவருடைய பேச்சும் சரியாக இல்லை. மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி நடத்திய வீடியோ கான்ஃபரன்ஸ் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதோடு, ராகுல்காந்திக்கு இணையான தலைவராகத் தன்னை நினைத்துக் கொண்டு செயல்படுகிறார். கூட்டணிக் கட்சிக்கான தர்மத்தை மதிக்காமல் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தி.மு.க.வுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக போராட்டம் நடத்தியது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அவருக்கு எதிராக முன்வைக்கின்றனர்.

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட ஜோதிமணிக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், மாநில தலைவர் அழகிரிக்கு, க.பரமத்தி வட்டார காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் செந்தில்குமார், இரத்தத்தில் எழுதிய கடிதத்தை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் பாங்க் சுப்பிரமணியத்திடம் கொடுத்துள்ளார்.