Skip to main content

கடவுளைப் போன்ற மருத்துவர்கள் இப்படி வழக்கு தொடர்ந்து நேரத்தை வீணடிக்கலாமா? - குட்டு வைத்த நீதிமன்றம்

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

Can doctors continue to waste their time in litigation like this?-Court

 

'ஆரம்ப சுகாதார நிலையங்களில் சரியான வசதிகள் இல்லை என்று கூறி மருத்துவர்கள் பணியாற்ற மறுக்க முடியாது' என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

 

மருத்துவ மேற்படிப்பை முடித்தவர்கள் இரண்டு ஆண்டு காலம் தமிழக அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டதின் அடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த 19 மருத்துவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற நியமனம் வழங்கப்பட்டது. இந்த நியமனங்களை ரத்து செய்துவிட்டு அரசு தலைமை மருத்துவமனையில் தாங்கள் பணி செய்ய பணிநியமனம் வழங்க வேண்டும்; அடிப்படை வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற முடியாது என அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

 

இன்று இந்த வழக்கானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் 'எட்டு பேருக்கு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மீதமுள்ள 11 பேருக்கு கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணி வழங்கப்பட்டிருக்கிறது. அங்கு பணியாற்ற ஒப்புக்கொண்டு தான் நியமனங்களுக்கு இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது.

 

அதனையடுத்து இந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதி, நோயாளிகள் மருத்துவர்களைத்தான் கடவுள் போல பாவிக்கிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். கிராமப்புறங்களுக்கும் மருத்துவம் சென்றடையும் வகையில் இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நீதிமன்றத்தினை நாடி நேரத்தை செலவழிக்கக் கூடாது. ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த அரசு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கூறுவதை ஏற்க முடியாது எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தார். மேலும், வரும் பத்தாம் தேதிக்குள் 19 பேரும் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் சேர வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர்.