Skip to main content

தடுப்பூசி பற்றாக்குறையால் மக்கள் அவதி..! 

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

Erode People suffering from vaccine shortage ..!

 

நாடு முழுக்க கரோனாவின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கரோனா பரவல்லை கட்டுப்படுத்த முதற்கட்டமாக கோவாக்சின், கோவிஷில்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்தன. முதலில் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன. அதன்பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 முதல் 59 வயது உள்ளவர்களுக்கும், தொடர்ந்து  18 வயது முதல் 45 வயது உள்ளவர்களுக்கும் என  இந்திய அளவிலும், தமிழகத்திலும் இந்த தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. 

 

ஈரோடு மாவட்டத்திலும் இந்த இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது. முதலில் தடுப்பூசி பற்றிய அச்சத்தால் பொது மக்கள் பெரும்பாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் கட்டவில்லை. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை நூற்றுக்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதேபோல் தனியார் ஆஸ்பத்திரியிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன. தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து உயிரிழப்பும் ஏற்பட்டு வருவதால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் தடுப்பூசி போட மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கும் தடுப்பூசி எண்னிக்கை குறைவாக இருப்பதால்  தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசி கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்கள், இரண்டாம் டோஸ் போடாமல் திணறி வருகின்றனர். ஆனால், அதேநேரம் கோவிஷில்டு தினமும் 100 பேரு வீதம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் போடப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 18 ஆயிரத்து 946 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். இதில் 18 வயது முதல் 44 வயதுவரை உள்ள 39 ஆயிரத்து 50 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர். அதேசமயம், மக்கள் மத்தியில் தடுப்பூசி போட்டுக்கொள்வது சம்பந்தமாக குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. எந்த நாளில் எத்தனை பேருக்கு எந்த இடத்தில் தடுப்பூசி போடப்படுகிறது என்ற விவரம் தெரியாமல் மக்கள் குழம்பி விருகின்றனர். 

 

இந்த நிலையில், ஈரோடு மாநகர் பகுதியில் இன்று காந்திஜி ரோடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், அகத்தியர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 100 பேருக்கும், கருங்கல்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 100 பேருக்கும், வீரப்பன்சத்திரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், ராஜாஜி புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், நேதாஜி ரோடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், பிபி அக்ரகாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், சூரியம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், பெரியசேமூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், சூரம்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும் கோவிசீல்டு தடுப்பூசி 18 வயது முதல் அனைத்து வயதினருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை போடப்பட்டது. 

 

இதற்காக காலையிலேயே வந்த மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசை அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டது. அதேநேரம் கோவாக்சின் தடுப்பூசிக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது.  இந்நிலையில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் 100 பேருக்குதான் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தெரியாமல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 300  முதல் 500 பேர் வரை திரண்டனர். ஆனால், அவர்களுக்கு டோக்கன் வழங்க முடியவில்லை. இதனால் கோபம் அடைந்த மக்கள், தடுப்பூசி போடும் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இன்று கருங்கல்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் டோக்கன் கிடைக்காத மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். இதைப்போல் பிபி அக்ரஹாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் அதிக அளவு கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைப் போன்று பல்வேறு இடங்களிலும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.