Skip to main content

" தமிழக இடைத்தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் ! " - அமித்ஷாவிற்கு சசிகலா புஷ்பா கோரிக்கை

Published on 22/09/2019 | Edited on 22/09/2019

அதிமுகவுடன் கூட்டணி வைத்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது பாஜக. ஐந்து இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்திலும் பாஜக வெற்றிப்பெறவில்லை. அதிமுக தங்களுக்கு துரோகமிழைத்து விட்டதாக பிரதமர் மோடியிடமும், பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷாவிடமும் தோல்விக்கான காரணங்களை அப்போதே பட்டியலிட்டனர். இதனால் அதிமுக தலைவர்கள் மீது அதிர்ப்தியடைந்தது அகில இந்திய பாஜக. இதனையடுத்து, டெல்லிக்குப் படையெடுத்த அதிமுக தலைவர்கள், பாஜக தலைவர்களை கெஞ்சிக் கூத்தாடி சமாதானப்படுத்தினர். இதனால் கடந்த 5 மாதங்களாக அதிமுகவும் பாஜகவும் கூட்டணியை தொடர்ந்தபடி இருக்கிறது.

 

 “In Tamil Nadu by-election BJP is separate Be competitive! " - Sasikala Pushpa Request to Amitsha

 

தற்போது, நாங்குநேரிக்கும் விக்கிரவாண்டிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  ' அதிமுக கூட்டணியில் நாங்குநேரியில் பாஜக போட்டியிட வேண்டும் ' என்றும்,  ' அதிமுக கூட்டணியை தவிர்த்து இடைத்தேர்தலை பாஜக தனித்து எதிர்கொள்ளவேண்டும் ' என்றும் தேசிய தலைமையை வலியுறுத்துகின்றனர் தமிழக பாஜகவினர். இந்த சூழலில், தேசியதலைவர் அமித்ஷா மற்றும் செயல் தலைவர் ஜே.பி.நட்டா இருவரிடமும் இடைத்தேர்தல் குறித்து மனு ஒன்றைத் தந்துள்ளார் அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா.

அந்த மனுவில்,  " நாங்குநேரி,விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும்.  தமிழகத்தில் அதிமுகவும், திமுகவும் தொடர்ந்து நாடார்களையும், வன்னியர்களையும் புறக்கணித்தே வருகின்றன.

 “In Tamil Nadu by-election BJP is separate Be competitive! " - Sasikala Pushpa Request to Amitsha

 

பிரதமர் மோடியும், பாஜக தலைவராகிய  நீங்களும் (அமித்ஷா) நாடார்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, BRICS அமைப்பின் ஆசியா பிராந்திய தலைவராக   ஜெகதீச பாண்டியன், அப்துல் கலாம் அலங்கரித்த DRDO சேர்மன்  பதவியில் கிறிஸ்டோஃபர் என இரு கிறிஸ்தவ நாடார்களை நியமித்து கவுரவப்படுத்தியிருக்கிறீர்கள்.
 

மதம் கடந்து திறமைக்கு கொடுத்த மரியாதை இது. ISRO சேர்மனாக சிவன் நாடார், தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் ஆகிய இரண்டு இந்து நாடார்களுக்கு உயரிய  பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், அதிமுக, 60 ஆண்டுகள் வரலாற்றில் முதல்முறையாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாடார்களுக்கு மந்திரி பதவி கொடுக்காமல் புறக்கணித்துள்ளது. திமுகவோ,மாவட்ட செயலாளர், ராஜ்யசபை உறுப்பினர் உள்பட கட்சியின் அனைத்து நிலையிலுள்ள  பதவிகளில்  சகலவிதத்திலும் நாடார்களுக்கும் வன்னியர்களுக்கும் உரிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை. செய்நன்றி மறவாத  நாடார்களும் வன்னியர்களும் பாஜகவின் பின்  அணித்திரள வைக்க ஒரு வாய்ப்பு வந்துள்ளது. நாங்குநேரி இடைத்தேர்தலில், பாஜக சார்பில் நாடார் வேட்பாளரை நிறுத்துங்கள்.

 

 “In Tamil Nadu by-election BJP is separate Be competitive! " - Sasikala Pushpa Request to Amitsha


அதிமுகவின் நடவடிக்கைகளால் பாஜகவிற்கு ஏற்பட்ட பின்னடைவை, நாங்குநேரி இடைத்தேர்தலில் நீங்கள் வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் சரி செய்து விடலாம். இரண்டு திராவிட கட்சிகள் மீதும் வெறுப்பிலுள்ள நாடார்கள், பாஜகவிற்கு பேராதரவு கொடுத்து, திமுக - அதிமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள். அதுபோல், விக்கிரவாண்டியில் திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ள A.G.சம்பத் போன்ற வன்னியர் ஒருவரை வேட்பாளராக நிறுத்துங்கள். திராவிட கட்சிகள் மீது அதிருப்தியிலுள்ள நாடார், வன்னியர், முத்திரையர்கள் உங்கள் பின்னால், தேன்கூட்டில் தேனீக்கள் கூடுவது போல் அணித்திரள்வார்கள்.

உண்மையான சமூகநீதி பாஜகவில்தான் இருக்கிறது எனும் நம்பிக்கையை பிற சமூக  மக்கள் மனதில் முளைத்து, உங்களை பலப்படுத்தும். போலி திராவிட கட்சிகளுக்கு சாவு மணி அடிக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறேன். அதனால், இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் " என அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் சசிகலா புஷ்பா.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைப்பிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார்.