Skip to main content

தொழிலதிபரை மிரட்டி வசூல் வேட்டை; பென்னாகரம் போலீஸ்காரர் உள்ளிட்ட இருவர் கைவரிசை!

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்திருந்த பெங்களூரு தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்த பென்னாகரம் காவல்நிலைய இரண்டாம்நிலைக் காவலர் உள்ளிட்ட இருவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, காவலரின் நண்பரையும் கைது செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி கொல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் மதுராஜ் ரெட்டி. தொழில் அதிபர். இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து, கடந்த ஜன. 28ம் தேதி ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்திருந்தார்.

 

businessman as threatened; Pennagaram policeman including two handcuffs


அப்போது, தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள குந்துக்கோட்டை வனத்துறை சோதனைச்சாவடி அருகே, அஞ்செட்டி செல்லும் வழியில் மேடுபள்ளம் என்ற இடத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், மதுராஜ்ரெட்டியும் அவருடைய நண்பர்களும் வந்த காரை வழிமறித்து நிறுத்தினர். மர்ம நபர்கள் தங்களை காவல்துறையினர் என்று கூறியதுடன், ஓட்டுநர் உரிமம், பதிவுச்சான்றிதழ், காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்குமாறு கூறியுள்ளனர்.

அதன்படி மதுராஜ் ரெட்டி அந்த காருக்கு உண்டான பதிவு ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை காண்பித்துள்ளார். ஆனாலும், அவர்களை மிரட்டி 10 ஆயிரம் ரூபாய் பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மதுராஜ், இதுகுறித்து தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதாவிடம் புகார் அளித்தார்.

 

businessman as threatened; Pennagaram policeman including two handcuffs

 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டது தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள போடூரைச் சேர்ந்த மாதவன் மகன் பாரதி மோகன் (27) என்பதும், அவர் ஓசூர் நகர காவல்நிலையத்தில் இரண்டாம்நிலைக் காவலராக இருப்பதும் தெரிய வந்தது. அவருடன் வந்த மற்றொரு நபர், தர்மபுரி தடங்கம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கார்த்திகேயன் (48) என்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில், கார்த்திகேயனை புதன்கிழமை (பிப். 12) காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறை வலைவீசி தேடி வருவதை அறிந்த இரண்டாம்நிலைக் காவலர் பாரதிமோகன் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது