Skip to main content

வங்கிகளை ஏமாற்றுகிறாரா தொழிலதிபர்? - கதறும் இளைஞர்!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

Is the businessman cheating the banks by keeping fake documents

 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவருக்குச் சொந்தமாக ஆரணி நகரில், 4 அடுக்கு மாடி வணிக வளாகம் உள்ளது. 2017ல் இந்தக் கட்டிடம் உட்பட சில சொத்துகளை தனியார் வங்கியில் அடகு வைத்து ரூ.4 கோடி கடன் பெற்றுள்ளார். அந்தக் கடனை சரியான முறையில் திருப்பிச் செலுத்தாததால், அதனை ஏலத்துக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது வங்கி நிர்வாகம். அதன்பின் நடந்தவற்றை நம்மிடம் கூறிய வினோத்குமார், “அந்த கட்டிடத்தோடு, வேலப்பாடி கிராமத்தில் உள்ள எங்கள் வீடுகளை இணைத்துக் கடன் வாங்கியிருந்தோம். அதில் வணிக வளாகத்தை மட்டும் தனியே பிரித்து எடுத்து விற்பனை செய்து கடன்களை அடைக்க முடிவு செய்தோம். அதற்கு வங்கி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. அப்போது அந்தக் கட்டிடத்தை நான் வாங்கிக்கொள்கிறேன் என முன்வந்தார் ‘அரசு டிரேடர்ஸ்’ என்கிற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அரசு. நாங்களும் சரியென்றோம். 10 லட்ச ரூபாய் வங்கிக் கடனை முதல் கட்டமாகச் செலுத்தினார். அதன்பின், கரோனா வந்து, எல்லாம் முடங்கியது. வங்கியும் கடனைக் கட்ட தவணை வழங்கியது.

 

அந்த கட்டிடத்தில் உள்ள கடைகளை வாடகைவிட முயன்றபோது, 'அந்த கட்டிடத்துக்கு உரிமையார் அரசாமே' என்றார் வாடகைக்கு வர முயன்ற ஒருவர். அதிர்ச்சியாகி விசாரித்தபோது, கட்டிடத்தின் இ.பி. கனெக்ஷன் அரசு பெயரில் மாறியிருந்தது தெரிந்தது. இ.பி.-யில் விசாரித்தபோது, வி.ஏ.ஓ. அளித்த சான்றிதழ்படி இணைப்பு வழங்கினோம் என்றார்கள். வி.ஏ.ஓ.விடம் விசாரித்தபோது, நான் சான்றிதழ் தரவில்லையென்றார். இதுவெல்லாம் புகாராக ஆர்.டி.ஓவிடம் தந்தபோது, விசாரணை நடத்தி இடத்தின் உரிமையாளர் நான் தான் எனச் சான்றிதழ் வழங்கினார். ஆனாலும் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு காலி செய்யவில்லை. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்.

 

என்னை மட்டுமல்ல இதைப்போல் பலரையும் சீட்டிங் செய்திருப்பதை நான் விசாரித்தபோதுதான் தெரிந்துகொண்டேன். அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது. அவர் ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டி விற்பனை தொழில்களையும் செய்கிறார். கடந்த இரண்டு வருடத்தில் ஆரணி நகரத்தை ஒட்டியுள்ள பையூர், வேலப்பாடி கிராமங்களில் வீட்டு மனை அமைத்தும், அதில் சில மனைகளில் வீடுகள் கட்டி விற்பனையும் செய்துள்ளார். 17 வீடுகள் கட்டி விற்பனை செய்துள்ளதாக தெரிந்து, அதுபற்றிய தகவல்களை ஆர்.டி.ஐ மூலமாக பெற்றபோது, சில வீடுகள் மட்டுமே ஒரிஜினலாக சிலர் வாங்கியுள்ளார்கள். மற்றவையெல்லாம் அவரிடம் வேலை செய்பவர்கள் பெயரில் வாங்கியதாக ஆவணங்கள் சொன்னது. அவர்கள் எல்லாம் இந்தியன் வங்கி, கனரா வங்கி உட்பட சில வங்கிகளில் ஹவுஸிங் லோன் மூலம் வீடு வாங்கியதாகத் தெரிந்தது. வங்கிகளுக்கு தரப்பட்ட பிளானிங், வரி ரசீது உட்பட சில ஆவணங்கள் போலியானது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர் காவல்நிலையத்தில் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல், வங்கிகளும் இதுபற்றி நடவடிக்கை எடுக்காமல் அப்படியே வைத்துள்ளார்கள்” என்றார்.

 

இதுபற்றி இரும்பேடு ஊராட்சி மன்றத் தலைவர் தரணியின் கணவர் வெங்கடாச்சலத்திடம் கேட்டபோது, “அப்ரூவல் இல்லாமல், போலியான ரசீதுகளைப் பயன்படுத்தி வீடுகள் விற்பனை செய்திருக்காங்க. மனைகள் விற்பனை செய்திருக்காங்கன்னு புகார் வந்திருக்கறதா பி.டி.ஓ. அலுவலத்தில், வங்கி அதிகாரிகள் வந்து விசாரிச்சிட்டு போனாங்க. அந்த இடத்துக்கான வரைபடம், அனுமதி ரசீதுகள் எதுவும் எங்களிடம் இல்லை. ஆவணத்தில் உள்ள கையெழுத்து, பழைய தலைவருடையதான்னு கேட்டாங்க. அதை அவரிடம் தான் கேட்கனும்னு சொன்னேன். அந்தப் பகுதிக்கு புதுசா வீட்டு வரி ரசீது போட வேணாம்னு சொல்லிட்டாங்க. அதனால் போடல. புகார் தரச்சொன்னாங்க காவல் நிலையத்தில், ரிஜிஸ்டர் ஆஃபிஸில் தந்திருக்கேன்.” என்றார்.

 

குற்றச்சாட்டப்படும் அரசு ஃபிளாட்ஸ் உரிமையார் அரசுவை தொடர்பு கொண்டபோது, அவர் நமது லைனை எடுக்கவில்லை.

 

குறிப்பிடும் இடங்களில் வாடகை வைக்கச் சென்றவர், அதை தன்னுடைய இடம் எனச் சொல்லி வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட முயன்றபின்பே விவகாரம் வெளியானது. இருதரப்புக்கும் இடையே ஒப்பந்தம் எதுவுமில்லை. லோன் வாங்கியதில் சீட்டிங் நடந்ததா எனத்தெரியாது, ஆனால் அந்த இடங்களுக்கு அப்ரூவல் வாங்கியதாகத்தான் தகவல்கள் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.