Skip to main content

ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்ல லஞ்சம்; ஜி.ஹெச். ஊழியர்கள் 2 பேர் பணியிடைநீக்கம்!

Published on 05/08/2020 | Edited on 05/08/2020
 Bribe to carry on stretcher; 2 Salem GH employees sacked

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர், கடந்த வாரம் பிரசவ சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.

 

இந்நிலையில், அந்த கர்ப்பிணி பெண்ணை ஸ்ட்ரெச்சர் வண்டியில் அமர வைத்து அழைத்து செல்வதற்கும், பிரசவ அறைக்குள் சென்று உணவு கொடுத்து வருவதற்கும் அந்த பெண்ணின் குடும்பத்தினரிடமிருந்து மருத்துவமனை ஊழியர்கள் இருவர் லஞ்சம் வாங்குவது தெரிய வந்தது. இது தொடர்பான காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில், கர்ப்பிணி தாயின் குடும்பத்தினரிடம் பணம் பெறுவது, அவுட்சோர்சிங் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட இரண்டு ஊழியர்கள்தான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து, மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் உத்தரவிட்டார்.

 

மேலும் அவர், ''அரசு மருத்துவமனையில் எந்த ஒரு சேவைக்கும் கட்டணம் வசூலிப்பதில்லை. எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி. ஸ்கேன், முழு உடல் பரிசோதனை உள்ளிட்ட சில சேவைகளுக்காக அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே பெறப்படுகிறது. இவற்றை தவிர மற்ற சேவைகளுக்காக யாரேனும் பணம் கேட்பது தெரிய வந்தால் மருத்துவமனை நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கலாம்,'' என்றார்.

 

சேலம் அரசு மருத்துவமனையில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்கள் இருந்தால், இதற்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலருக்கு 94433 44422 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.