Skip to main content

'துணிச்சல் மற்றும் செயல்திறன் மிக்க அரசியல்வாதி'- வெற்றிவேல் மறைவுக்கு தமிமுன் அன்சாரி இரங்கல்!

Published on 15/10/2020 | Edited on 15/10/2020
Brave and efficient politician' - Tamimun Ansari mourns Vetrivel's death

 

சென்னையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார். கரோனாவுக்கு சென்னை தனியார் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது.

அவரின் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மனிதநேய  ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் வெற்றிவேல் அவர்கள் கரோனா தொற்று கிசிச்சை பெற்று வந்த நிலையில், இன்று  உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம். சட்டமன்றத்தில் எங்களோடு துடிப்பாக செயல்பட்ட அவர், அரசியல் மாற்றங்களில் தனது பதவியை இழந்து எங்களோடு தொடர்ந்து பயணிக்க முடியாமல் போனார். ஒரு முறை சட்டமன்றத்தில் அவருக்கும், எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்போது நான் எழுந்து சென்று, இரு தரப்புக்கு இடையே மோதல் நிகழாத வண்ணம் நிலைமையை சீராக்கினேன்.

அந்த நிகழ்வுக்கு பிறகு அவர் நெருங்கிய நண்பரானார். அவர் அமமுகவின் பொருளாளராக பணியேற்று அக்கட்சியின் வளர்ச்சியில் முழு வீச்சில் ஈடுபட்டு வந்தார். துணிச்சல் மற்றும் செயல்திறன் மிக்க அரசியல்வாதியாக அறியப்பட்டார்.

தற்போது கரோனா தொற்று காரணமாக அவர் பெற்று வந்த  கிசிச்சை பலனின்றி, இறந்திருப்பது துயரத்திற்குரியதாகும். நீண்ட காலம் அரசியலில் பணியாற்றிட வேண்டியவரின் பயணத்தில் கரோனா நோய் முற்றுப்புள்ளியாய் விழுந்தது வருத்தமளிக்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும்,TTV. தினகரன் உள்ளிட்ட அமமுக வினருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் எனக்கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.

Next Story

ம.ஜ.க.வின் தலைவராக தமிமுன் அன்சாரி பொறுப்பேற்பு

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Tamimun Ansari took charge as the president of MJK

2015ம் ஆண்டு மனிதநேய ஜனநாயக கட்சி துவங்கப்பட்டு, அதன் பொதுச் செயலாளராக தமிமுன் அன்சாரி செயல்பட்டுவந்தார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது ம.ஜ.க. இதில், நாகப்பட்டினம் தொகுதியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்நிலையில், நேற்று தஞ்சாவூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக்குழுவின் கூட்டத்திற்கு பின்பு மாலையில், தலைமை நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துவரும், தமிமுன் அன்சாரி, கட்சி தலைவராக பொறுப்பேற்றார். மேலும், அவர் வகித்துவந்த பொதுச் செயலாளர் பதவிக்கு மௌலா. நாசர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பொருளாளராக ரிஃபாயீ, துணைத்தலைவராக மன்னை. செல்லச்சாமி, இணைப் பொதுச்செயலாளராக செய்யது அகமது ஃபாரூக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவைத்தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகள் இனி கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.