Skip to main content

தஞ்சையில் ஆளுநருக்கு கருப்பு கொடி... இருளில் தவிக்கும் விவசாயிகள் குடும்பத்துடன் கைது-பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு மேலையூர் யாதவர் தெருவிற்கான மின்சார இணைப்புகள் கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜாபுயல் தாக்குதலால் மின்கம்பங்கள் விழுந்து சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் அதனை சீர்படுத்தப்படாமல் இருளிலேயே விவசாயக் குடும்பங்கள் வாழ்ந்து வரும் கொடுமை தொடர்கிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, மின்சார துறை, காவல்துறையினர் கொண்ட கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. வருவாய்துறை மூலம் நில அளவை செய்து சாலை ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய கம்பங்கள் அமைத்து மின் இணைப்பு கொடுக்க மின்சார வாரிய தலைவரும் சிறப்பு அனுமதி வழங்கி பணி துவங்கிய நிலையில் தனிநபர் சிலரை துண்டி விட்டு ஆளும் கட்சியினர் சிலர் செய்யும் பழிவாங்கும் நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் துணை போவதால் மின் இணைப்பும் வழங்காமல், சாலை போக்குவரத்து இன்றி ஒரு வருட காலமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

kaja

 

தூர் வாரும் பணிகளில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளை தட்டிக் கேட்கும் விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் மீது ஆளும் கட்சியினர் சிலரின் தூண்டுதலால் கொலை வெறி தாக்குதலும் நடத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் மேற்க்கொள்ளப்பட்டு பலரின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதோடு, சிறையிலும் அடைத்து கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் ஆளும் கட்சி பிரமுகர்களின் அச்சுறுத்தலால் சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய மாவட்ட நிர்வாகம் தயக்கம்காட்டி வருவதோடு, மின்சாரம்  கொடுக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகத்திற்கு நெருக்கடி தருவதாக உயர் அதிகாரியே தெரிவிப்பது வேதனையளிக்கிறது.

எனவே இதனை கண்டித்தும், தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கி இயற்க்கை சீற்றங்கள் ஏற்ப்படும் நிலையில் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பின்றி பாதிக்கும் வேலையில் தீபாவளி நெருங்கி வரும் வேலையில் உடன் மின் இணைப்பு வழங்கி, சாலை அமைத்து வெளிச்சம் கொடுத்து விவசாயக் குடும்பங்களை பாதுகாத்திட வலியுறுத்தி இன்று (22ம்) தேதி தஞ்சாவூர் வருகை தர உள்ள மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கருப்புக் கொடி காட்டி நீதி கேட்கும் ஆர்ப்பாட்டத்தினை நடத்திட பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர் சார்பில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் அறிவித்து தீவிரமாக ஏற்பாடுகள் செய்துவந்த நிலையில் மின் இணைப்பு கொடுக்க மறுத்து மக்களை யாருக்காகவோ அஞ்சி இருளிலே தவிக்க விட்டு உயிருக்கு பயந்து ஓர் ஆண்டு காலமாக போராடி வரும் மக்களுக்கு மின் இணைப்பு கொடுக்க மறுக்கும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அவர்களின் செயல் மனிதநேயமற்ற செயல் மட்டுமின்றி வன்மையாக கண்டிக்கத்தக்கதுமாகும்.
 

kaja

 

மேலும் இருளிலே வாழும் குடும்பங்களுக்கு உயிருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமேயானால் மாவட்ட ஆட்சியரே பொருப்பேற்க வேண்டும்.

இந்நிலையில் தீபாவளி நெருங்கி வரும் நிலையில் மின் இணைப்பு கொடுக்க வேண்டிய ஆட்சியர் மனிதாபிமானமற்ற முறையில் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்து வந்த விவசாயிகளையும் மண்டல தலைவர் என்.அண்ணாத்துரை மாவட்ட செயலாளர் எம்.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையை தூண்டி விட்டு நள்ளிரவில் கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும் நாஞ்சிக் கோட்டையிலிருந்து புறப்பட்டு பைபாஸ் சாலை நோக்கி மாவட்ட துணை செயலாளர் வி.எஸ்.வீரப்பன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள்  தங்களது வாகனங்களில் வந்த குடும்ப பெண்கள், குழைந்தைகளோடு கருப்புக்கொடி காட்ட  வந்தவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்து திருமண மண்டபங்களிலும்,காவல் நிலையங்களினும் அடைத்துள்ளனர். இதனால்
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பறிதவித்து வருகின்றனர்.

இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடன் தலையிட்டு கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்வதோடு, உடன் மின் இணைப்பு வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு விளக்கேற்றி உயிருக்கும், வாழ்க்கைக்கும் உத்திரவாதமளித்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன் இவ்வாறு தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.