Skip to main content

நாதஸ்வரம் வாசித்த சிறுவர்கள்..! பரிசு வழங்கி பாரட்டிய அமைச்சர்..! 

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

Boys who played Nataswaram Minister presents gifts


புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம் அம்புக்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்றுவரும் ஜீவா, உதயநிதி இருவரும் கரோனா கால விடுமுறையைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என எண்ணினர். அதற்கு அவர்களின் பெற்றோர்களும் சம்மதித்ததால், அதே ஊரில் உள்ள பிரபல நாதஸ்வர கலைஞர் இசைமணி சேகல் ரெங்கநாதன் என்பவரிடம் சென்று தங்களுக்கு நாதஸ்வரம் கற்றுக்கொடுங்கள் என தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்னர். அவரும் அரசுப் பள்ளி மாணவர்களின் ஆர்வத்தைக் கண்டு இலவசமாகவே நாதஸ்வரம் இசையை கற்றுக்கொடுத்து வந்துள்ளார்.

 

அவரிடம் முறையாக நாதஸ்வரம் இசையைக் கற்றுக்கொண்ட மாணவர்கள், தங்களுடைய பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டட திறப்பு விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முன்னிலையில் முதல் முறையாக நாதஸ்வரத்தை வாசித்துக் காட்டியுள்ளனர். மாணவர்களின் திறமையைக் கண்ட விஜயபாஸ்கர், ரொக்கப் பணம் வழங்கி பாராட்டியுள்ளார். மாணவர்களின் திறமையை நேரில் கண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி, மாணவர்களை நேரில் வரவழைத்துப் பாராட்டியுள்ளார்.

 

இதுகுறித்து அரசுப் பள்ளி மாணவர் ஜீவா கூறியதாவது; “என் அப்பா  தனபால், தவில் வாசிக்கிறாங்க. சிறு வயது முதல் எனக்கு இசையின் மேல் ஓர் ஆர்வம் இருந்தது. தற்பொழுது கரோனா விடுமுறை என்பதால் விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்று எண்ணிய என்னை, எனது விருப்பத்தின் பேரில் எங்கள் ஊரில் உள்ள நாதஸ்வர கலைஞர் இசைமணி சேகல் ரெங்கநாதன் அய்யாவிடம்  நாதஸ்வர வகுப்பில் சேர்த்தாங்க. நானும் 6 மாதங்களாக  நாதஸ்வரம் கத்துக்கிறேன். இதுவரை மூன்றுமுறை பொது இடங்களில் நாதஸ்வரம் வாசித்துள்ளேன். பள்ளியில் என் நண்பர்களுக்கு நான் நாதஸ்வரம் வாசிக்கும் விஷயம் தெரியும் என்றாலும், முதன்முதலாக பள்ளியில் நடைபெற்ற விழாவில்தான் எனது வாசிப்பைப் பார்த்தாங்க. ரொம்பப் பாராட்டினாங்க. எனக்கு வருங்காலத்தில் மியூசிக் டீச்சர் ஆகணும் என்ற ஆசை உள்ளது” என  உற்சாகமாக கூறினார்.

 

Boys who played Nataswaram Minister presents gifts


மாணவர் உதயநிதி கூறியதாவது; “என் அப்பா கூலி வேலை செய்து வருகிறார். எனது தாத்தா இசைமணி சேகல் ரெங்கநாதன், நாதஸ்வர இசைக்கலைஞர் என்பதால் நான் சிறு வயது முதலே எனது தாத்தாவின் நாதஸ்வர இசையைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். தற்பொழுது கரோனா கால விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என எண்ணி, என் தந்தையிடம் நாதஸ்வர இசை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எனது விருப்பத்தைக் கூறினேன். அவரும் எனது விருப்பத்தை ஏற்று எனது தாத்தாவிடம் நாதஸ்வர இசை வகுப்பில் சேர்த்துவிட்டாங்க. எனது தாத்தா, எனக்கு தினமும் காலை 5 மணி முதல் 6 மணி வரையும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் நாதஸ்வர இசையைக் கற்றுக்கொடுத்தார். நானும் தொடர்ந்து 6 மாதம், முறையாக கற்றுக்கொண்டேன். எனக்கு நாதஸ்வரம் வாசிக்கும் பழக்கம் இருப்பது எனது வகுப்பாசிரியர்கள், மாணவர்கள் யாருக்கும் தெரியாது. முதல் முறையாக எங்கள் பள்ளியில் நடைபெற்ற சுற்றுச்சுவர் திறப்பு விழாவன்று அமைச்சர் முன்னிலையில் நாதஸ்வரம் இசையை வாசிக்கும்போது என்னிடம் இருந்த திறமை வெளியே வந்தது. அன்றைய தினம் என்னை விஜயபாஸ்கர் நேரில் அழைத்து ரொக்கப் பணம் வழங்கி பாராட்டிச் சென்றார். அன்றைய தினம் விழாவிற்கு வந்திருந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவல் விஜயலட்சுமியும் எங்களை நேரில் அழைத்துப் பாராட்டினார்கள். பள்ளியில்  நான்  நாதஸ்வரம் வாசிக்கும் விஷயம் தெரியவந்தவுடன் என் நண்பர்கள் ரொம்ப பாராட்டினாங்க. எனக்கும் வருங்காலத்துல மியூசிக் டீச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

”100 சதவீதம் நாங்கள் பாஜகவை எதிர்க்கிறோம்” - விஜயபாஸ்கர்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
 We are 100 percent against BJP says Vijayabaskar

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா  தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் எதிரில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். அதிமுக வேட்பாளர் கருப்பையா அனைவரையும் வரவேற்றார்.

திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி, சீனிவாசன்,அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், வளர்மதி,மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “திருச்சி பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக ப.கருப்பையா அறிவித்த நாள் முதல் தற்போது வரை ஜெட் வேகத்தில் அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் சிறப்பான முறையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் காரணமாக ஊரெல்லாம் ஒரே பேச்சு கருப்பையா இரட்டை இலை சின்னத்தில் மகத்தான வெற்றியை பெறுவார் என்ற செய்தி திருச்சி தொகுதி முழுவதும் சென்றடைந்துள்ளது. அது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

எந்தப் பணியிலும் தொய்வில்லாமல் திருச்சியின் குரலாக நாடாளுமன்றத்தில் கருப்பையாவின் குரல் ஓங்கி ஒலிப்பதற்காக திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் சிறப்பான முறையில் பணியாற்றி வருவதன் காரணமாக மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அது எங்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையும் தருகிறது. நிச்சயம் அவர் நூற்றுக்கு நூற்று பத்து சதவீதம் வெற்றி பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

திருச்சியினுடைய ஒட்டுமொத்த குரலாக நாடாளுமன்றத்தில் துடிப்புமிக்க இளைஞனுடைய குரலாக ஒலிக்கும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரத்தத்தில் ஊறிய எதிரி திராவிட முன்னேற்ற கழகம் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை .மூன்றாண்டு காலம் இவர்களுடைய ஆட்சியில் மக்களிடையே மிகப்பெரிய வெறுப்பும், அதிருப்தியும் இருக்கிறது.

பாஜகவோடு கூட்டணியில் இருந்த போதே நீதிமன்றம் மூலமாக மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் தனித்தன்மையுடன் கொள்கையோடு இருக்கும். தொடர்ந்து நீங்கள் அதைப் பார்க்கப் போகிறீர்கள். எடப்பாடி பழனிச்சாமி எதற்கும் துணிந்தவர். 100 சதவீதம் பாஜகவை நாங்கள் எதிர்க்கிறோம். அதை தெளிவாக எடப்பாடி பழனிச்சாமி தெளிவுபடுத்திவிட்டார். நாங்கள் அமைத்துள்ள கூட்டணியின் மூலம் மகத்தான வெற்றியைப் பெறுவோம்” எனத் தெரிவித்தார்.