Skip to main content

போனஸ்... 8 மணி நேர வேலை... பணிப் பாதுகாப்பு...! டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

Bonus ... 8 hours of work .. must give job security ...! Tasmac workers


டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், இன்று (06-11-2020) ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே, தமிழக அரசைக் கண்டித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டியு டாஸ்மாக் தொழிற்சங்கச் செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார்.
 

சி.ஐ.டி.யு பாரதி, பாட்டாளி மக்கள் கட்சி டாஸ்மாக் சங்கச் செயலாளர் ஆறுமுகம், ஏ.ஐ.டி.யூ.சி சின்னசாமி, கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட டாஸ்மாக் ஊழியர்கள், டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் 20 சதவீத போனஸை அரசு வழங்க வேண்டும். கரோனா  தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில், டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தைப் பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மாற்றியமைத்து அரசு உத்திரவிட்டுள்ளது. இது ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், கடையின் நேரத்தை முன்புபோல் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மீண்டும் மாற்றியமைக்க வேண்டும். 


டாஸ்மாக் கடையில் 17 ஆண்டுகாலமாகத் தொடர்ந்து பணிபுரிந்து வரும் ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பணி வரன் முறை, கால முறை ஊதியம், வார விடுமுறை மற்றும் நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை, தேசிய, மாநில அளவிலான பண்டிகைக் கால விடுமுறைகள் கொடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு சட்டப்படியான உரிமைகளை வழங்கிட வேண்டும். பிற துறைகளின் முன்களப் பணியாளர்களுக்கு வழங்குவது போல் கரோனா வைரஸ் தொற்றால், உயிரிழக்க நேரிட்டால் ரூபாய் 50 லட்சம் வழங்க வேண்டும். பணியின்போது மரணமடையும் ஊழியரின் குடும்பத்துக்கு ரூபாய் 25 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். 
 

அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் ஓய்வு பெறும்போது சேரவேண்டிய சட்டப்படியான ஓய்வு கால பணப் பலன்களைக் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷமிட்டுக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.