Skip to main content

போனஸ்... 8 மணி நேர வேலை... பணிப் பாதுகாப்பு...! டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

Bonus ... 8 hours of work .. must give job security ...! Tasmac workers


டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், இன்று (06-11-2020) ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே, தமிழக அரசைக் கண்டித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டியு டாஸ்மாக் தொழிற்சங்கச் செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார்.
 

சி.ஐ.டி.யு பாரதி, பாட்டாளி மக்கள் கட்சி டாஸ்மாக் சங்கச் செயலாளர் ஆறுமுகம், ஏ.ஐ.டி.யூ.சி சின்னசாமி, கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட டாஸ்மாக் ஊழியர்கள், டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் 20 சதவீத போனஸை அரசு வழங்க வேண்டும். கரோனா  தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில், டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தைப் பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மாற்றியமைத்து அரசு உத்திரவிட்டுள்ளது. இது ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், கடையின் நேரத்தை முன்புபோல் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மீண்டும் மாற்றியமைக்க வேண்டும். 


டாஸ்மாக் கடையில் 17 ஆண்டுகாலமாகத் தொடர்ந்து பணிபுரிந்து வரும் ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பணி வரன் முறை, கால முறை ஊதியம், வார விடுமுறை மற்றும் நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை, தேசிய, மாநில அளவிலான பண்டிகைக் கால விடுமுறைகள் கொடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு சட்டப்படியான உரிமைகளை வழங்கிட வேண்டும். பிற துறைகளின் முன்களப் பணியாளர்களுக்கு வழங்குவது போல் கரோனா வைரஸ் தொற்றால், உயிரிழக்க நேரிட்டால் ரூபாய் 50 லட்சம் வழங்க வேண்டும். பணியின்போது மரணமடையும் ஊழியரின் குடும்பத்துக்கு ரூபாய் 25 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். 
 

அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் ஓய்வு பெறும்போது சேரவேண்டிய சட்டப்படியான ஓய்வு கால பணப் பலன்களைக் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷமிட்டுக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

மக்களவைத் தேர்தல்; மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Lok Sabha elections; Orders to close liquor shops!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.