Skip to main content

கோயில் பூட்டை உடைத்த வழக்கில் கைதான பாஜக துணைத் தலைவர் அரசு மருத்துவமனையில் அனுமதி! 

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

BJP vice president arrested in case of breaking temple lock admitted to government hospital!

 

பாரத மாதா கோயில் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், உடல்நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

 

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, 75வது சுதந்திர தினத்தையொட்டி, பாஜக சார்பில் அமுதப்பெருவிழா பாத யாத்திரை நடந்தது. பாஜக மாநிலத் துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான கே.பி.ராமலிங்கம், பாத யாத்திரையைத் துவக்கி வைத்தார். இதையடுத்து, சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் உள்ள பாரத மாதா கோயிலில் மாலை அணிவிக்கச் சென்றார். கோயின் வாயில் கதவு பூட்டப்பட்டு இருந்ததால், கண்காணிப்பாளரிடம் கதவைத் திறக்கும்படி கூறினார். 

 

அங்கிருந்த ஊழியரோ, உயர் அலுவலரின் அனுமதியின்றி நான் கதவைத் திறக்க முடியாது என்று கூறி, கதவைத் திறக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கே.பி.ராமலிங்கம் மற்றும் கட்சியினர், வாயில் கதவின் பூட்டை கல்லால் அடித்து உடைத்து, உள்ளே சென்று பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தனர். 

 

இதையடுத்து, அரசு அனுமதியின்றி பாரத மாதா கோயில் கதவின் பூட்டை உடைத்து, அத்துமீறி உள்ளே சென்றதாக பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலைய காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர், ராசிபுரத்தில் வசித்து வரும் கே.பி.ராமலிங்கத்தை, அவருடைய வீட்டில் வைத்து, ஆக. 14ம் தேதி கைது செய்தனர். 

 

நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன்பு, பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். அவருக்கு ரத்தக்கொதிப்பு இருந்ததால், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட பாஜகவினர், அவரைக் காண சேலம் அரசு மருத்துவமனையில் திரண்டதால், அங்கு காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்