Skip to main content

கள்ளக்குறிச்சி நகரில் பாஜக-விசிக மோதல் அபாயம் பரபரப்பு!

Published on 25/10/2020 | Edited on 25/10/2020
bjp vck incident in kallakurichi

 

பெண்களை இழிவாக பேசியதாக விசிக தலைவர் திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு இந்து மத அமைப்புகள்  பாஜக, இந்து முன்னணி போன்ற கட்சியை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.மேற்படி அமைப்புகளைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள் காவல் நிலையங்களில் திருமாவளவன் மீது புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் திருமாவளவன் மீது போலீசார் வழக்கும்பதிவு செய்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக தலைவர் பாலச்சந்திரன் தலைமையில் பெண்களை இழிவாக பேசியதாக கூறி திருமாவளவனை கண்டித்து ஆர்ப்பாட்டத்திற்கு போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளார். போலீஸ் அனுமதி வழங்காத நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் அதை மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த தகவல் அறிந்த விசிக கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கச்சேரி சாலையில் திரண்டு வந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் நடத்திய பிஜேபி கட்சி அரசியல் கட்சியினரும் தரப்பினரும் எதிரெதிரே நின்று வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். இதனால் அங்கு இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்ப்பட்டது.

இதையடுத்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். அதன் பிறகு காவல்துறை அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய பாஜக கட்சியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதே போன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த பிஜேபி கட்சியினர் எண்பது பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இதனால் கள்ளக்குறிச்சி நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.