
சென்னையில் பிரியாணி கடையில்சிக்கன் ரைஸ் சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டதற்கு, அமித்ஷாவின் பி.ஏவுக்கு போன் போடுவேன் என மிரட்டியபாஜகபிரமுகரை போலீசார்கைது செய்துள்ளனர்.
சென்னைராயப்பேட்டை முத்தையாதெருவில்பிரியாணி கடை வைத்திருப்பவர் சையதுஅபுபக்கர். இவரது கடைக்குநேற்று இரவு கடையைமூடும்நேரத்தில் போதையில்வந்தமூன்று பேர் சிக்கன்ரைஸ்வேண்டும் என சையதுவிடம் சொல்லியுள்ளனர். அவர்கள் மூவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் சிக்கன்ரைஸ்பார்சல்செய்து கொடுத்திருக்கிறார். மூன்று சிக்கன்ரைஸுக்கும் 180 ரூபாய் பணம் கேட்டுள்ளார் சையது. ஆனால் போதையில்இருந்த அவர்களில்ஒருவர் ''நான்பாஜகவின் பகுதிச் செயலாளர் என்னிடமே பணம் கேட்கிறாயா?''என கொலை மிரட்டல் விட்டதோடு''அமித்ஷாவின் பி.ஏவுக்கு போன் செய்தால் ஆயிரம் பேர் வருவாங்க. மதக்கலவரம் நடக்கும்'' எனவும் மிரட்டல் விட்டு தகராறில்ஈடுபட்டார்.
இதுகுறித்து உடனடியாக ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில்,ரோந்து வந்த போலீசார்மூன்று பேரிடமும் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், திருவல்லிக்கேணி பாஜக மேற்குத்தொகுதி செயலாளர் பாஸ்கர், திருவல்லிக்கேணி பாஜகபகுதிச்செயலாளராக இருக்கக்கூடிய புருசோத்தமன்,சூர்யா என்ற மூன்று நபர்களும் கலாட்டாசெய்துமிரட்டல் விட்டதுதெரியவந்தது. உடனே நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாஸ்கர்மற்றும் புருசோத்தமனைகைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதில்சூர்யா என்ற மூன்றாவது நபர் தலைமறைவானார். இவர்கள் செய்ததகராறு தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதனையும் போலீசார்முக்கியசாட்சியமாகவைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)