Skip to main content

பாஜக எங்களுக்கு போட்டியே இல்லை.. ராமநாதபுரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகதிகள் இருந்தும் கூட நாடாளுமன்ற தொகுதி இல்லை என்ற விரக்த்தியில் உள்ளனர் வாக்களர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள். இந்த நிலையில் தி.முக கூட்டணியில் புதுக்கோட்டை சார்ந்துள்ள ஒரு தொகுதியில் கூட தி.மு.க வேட்பாளர்கள் போட்டியிடவில்லை என்பதால் உடன்பிறப்புகள் சோர்வடைந்துள்ளனர். 

 

election

அதே போல அ.தி.மு.க கூட்டணியில் கரூர் தொகுதி மட்டும் அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை நிறுத்தப்பட்டுள்ளார் மற்ற  3 தொகுதியிலும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டனர்.  இந்த இரு கட்சிகளும் புதுக்கோட்டை மாவட்டத்தைவிட்டு ஒதுங்கி செல்ல தொகுதியை பறிகொடுத்த மக்கள் நோட்டாவின் பக்கம் அதிகம் வாக்களிப்பார்கள் என்பதால் தான் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள். 

 

election

 

இந்த நிலையில் தி.மு.க கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நவாஸ்கனி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திக்க வந்தார். முதலில் புதுக்கோட்டையில் சந்தித்த பிறகு அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி ராமநாதபுரம் தொகுதியில் வருவதால் அறந்தாங்கியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து ஆதரவை கேட்டார். அப்போது நான் ஒவ்வொரு நிர்வாகிகளையும் தனித்தனியாக சந்திக்க நேரமில்லை அதனால் அனைவரையும் மொத்தமாக சந்திக்கிறேன் களப்பணி செய்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். 

 

முன்னதாக புதுக்கோட்டையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது. பா.ஜ.க எங்களுக்கு போட்டி இல்லை. ராமேஸ்வரம் உள்ளிட்ட இந்து திருத்தலங்களை சுற்றுலாத்தளமாக மாற்ற முயற்சி செய்வேன் என்றார். தொடர்ந்து அறந்தாங்கியில் பத்திரிக்கையாளர்களிடம் எனக்கு விமானத்திற்கு தாமதம் ஆகிடுச்சு என்று பேட்டியை தவிர்த்துவிட்டு சென்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.