Skip to main content

''ராஜராஜ சோழனை இந்துவாக மாற்றியதாக பேசுபவர்கள் அனாதைகள்''-எச்.ராஜா விமர்சனம்

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

bjp H. Raja Interview

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா  நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அதில் திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர் என விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து வெற்றிமாறனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக பிரமுகர் எச்.ராஜாவிடம் செய்தியாளர்கள் இது குறித்த கேள்விகளை முன் வைத்தனர். அதற்கு பதிலளித்த எச்.ராஜா, ''யாரோ வெற்றிமாறனாம்... வெற்றி மாறனோ, தோல்வி மாறனோ தெரியவில்லை. ராஜராஜ சோழனை இந்துவாக மாத்த ஞானஸ்தானம் பண்ணிட்டோமா. எனக்கு அவ்வளவு சரித்திர அறிவில்லை. அவர் பெயரை வெற்றிமாறன் அப்படின்னு வைத்திருக்கிறார். அவரே ராஜராஜ சோழன் கட்டிய இரண்டு சர்ச், ரெண்டு மாஸ்க் எங்க இருக்கிறது என்று சொல்லிவிட்டால் போதும். ராஜராஜ சோழன் சிவனுடைய பக்தன். எந்த அளவுக்கு என்றால் தன்னை சிவபாத சேகரன் என்று அழைத்துக் கொண்ட மாமன்னன் ராஜராஜ சோழன். அவர் ஹிந்து இல்லையா'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் ''அவர் இந்து கிடையாது. அப்பொழுது சைவம் வைணவம் என்ற மதங்கள் தான் இருந்தது. அதனால் அவர் விரும்பிய சைவ கடவுளான சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற கருத்தை அவர்கள் தரப்பு முன் வைக்கிறார்கள்'' என்று கேள்வி எழுப்ப, வழக்கம்போல் ஆத்திரமடைந்த எச்.ராஜா, ''நீங்கள் தவறான ஆர்க்யூமென்டை என்னிடம் வைக்க கூடாது'' என்றார்.

 

அதற்கு செய்தியாளர், ''நான் வைக்கவில்லை. திருமாவளவன், ஜோதிமணி எம்பி ஆகியோர் வைக்கின்றனர்'' என்றார். அதற்கு எச்.ராஜா, ''தேச விரோதிகள், முட்டாள்கள் பேசுகிறார் என்றால் அதை நாம் பேசக்கூடாது. வேதம் வேற தமிழ் வேற இல்லை. வேதம் வேற சைவம் வேற இல்லை. அதனால் ராஜராஜ சோழன் இந்து தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படியும் இந்து தான். இந்து ஒரு அனாதி மதம். அதற்கு துவக்கமே கிடையாது. அனாதி என்றால் அனாதை அல்ல ராஜராஜ சோழனை இந்துவாக மாற்றியதாக பேசுபவர்கள்தான் அனாதைகள்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.