Skip to main content

"இது கொஞ்சம் கடினமான துறைதான், ஆனால் தற்போதுள்ள அமைச்சர் அனுபவசாலி” - அமைச்சர் புகழாரம்!!

Published on 16/06/2021 | Edited on 16/06/2021

 

"This is a bit of a difficult field, but the current minister is experienced" - Minister praise

 

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உணவு மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நஜூமைதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

அதைத் தொடர்ந்து தலைமையேற்றுப் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, “கலைஞர் ஆட்சிக் காலத்தில் இத்துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் நல்ல வளர்ச்சியை இத்துறையின் மூலம் தமிழக மக்களுக்கு வழங்கியிருந்தோம். இந்தத் துறையில் இரண்டு வருடங்களுக்கு மேல் ஒருவர் அமைச்சராக நீடிக்காத நிலை ஆரம்ப காலகட்டத்தில் இருந்தது. ஏனென்றால், பொதுமக்களின் உணவுப் பற்றாக்குறையை சரி செய்வதற்கான கடமையும் அதிகம் இருந்தது. இது கொஞ்சம் கடினமான துறைதான் என்பதால் பலர் இத்துறையில் தொடர்ந்து நீடிக்க மாட்டார்கள். ஆனால் தற்போது பொறுப்பேற்றிருக்க கூடிய அமைச்சர் மிகுந்த அனுபவசாலியானவர். தற்போது அவர் சிறப்பாக இந்த உணவுத் துறையை வழிநடத்திவருகிறார்.

 

1996க்குப் பிறகுதான் அனைத்து குடும்ப அட்டைகளும் கம்ப்யூட்டர் அட்டைகளாக இணையதளம் மூலம் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது. தற்போது இந்தத் துறை இணைய வழிகளோடு இணைக்கப்பட்டு பலமடங்கு மேம்பாடு அடைந்துள்ளது. தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கங்களில் 1,500 சங்கங்கள் மட்டுமே தன்னிறைவு அடைந்துள்ளன. பொது மக்களுக்கான மிக முக்கியத் துறையான இந்த உணவுப் பொருள் வழங்கல் துறை என்பது ஒவ்வொரு மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றக்கூடியது. எனவே அவற்றை சரியாக செய்யவும் அரசிடமிருந்து அவற்றைப் பெற்று முறையாக தொடர்ந்து கொடுக்க வேண்டிய கடமை அதிகாரிகளின் கையில் உள்ளது” என்று தெரிவித்தார். மேலும், “உணவுப் பொருட்கள் மழையில் நனைந்து சேதம் அடையாமல் இருக்க கடந்த 25 வருடங்களுக்கு முன்பு அதிக அளவில் கடினப்பட்டு அதைப் பாதுகாத்துவந்த நிலை மாறி, இன்று ஜெர்மன் டெக்னாலஜியைக் கொண்டு உணவுப் பொருட்களைப் பாதுகாக்க முயற்சி செய்து தமிழகம் நல்ல முன்னேற்றப் பாதையில் வளர்ந்துவருகிறது.

 

எனவே உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல், மழையில் நனையாமல், சேதமடையாமல் பொதுமக்களுக்கும் சரியான முறையில் பொருட்களை நியாய விலைக்கடைகள் மூலம் கொண்டு சேர்க்க தற்போதைய புதிய தொழில்நுட்பமுறை கைகொடுக்கிறது” என்றும் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்டம் வாரியாக அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டிய செயல் திட்டங்கள் குறித்தும் இதுவரை விநியோகிக்கப்பட்டிருக்கக்கூடிய மளிகைப் பொருட்கள், அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவற்றின் நிலைப்பாடு குறித்தும் இருப்பு குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.