Skip to main content

கிடா வெட்டு விருந்தில் இருதரப்பினர் மோதல் 

Published on 18/09/2023 | Edited on 18/09/2023

 

A bipartisan conflict at the Kida cut party

 

மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் குமரவேல். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோமங்கலத்தில் உள்ள அய்யனார் கோயில் தங்கள் குடும்ப விசேஷங்கள் எதுவானாலும் இங்கு வந்து குலதெய்வத்தை வழிபட்ட பிறகுதான் குமரவேல் குடும்ப சுப நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். அதன்படி தனது பிள்ளைகளுக்கு காதணி விழா நடத்த முடிவு செய்த குமரவேல் கோமங்கலம் அய்யனார் கோவிலுக்கு நண்பர்கள் உறவினர்களுடன் வாகனங்களில் வருகை தந்தார். அய்யனார் கோவிலில் பிள்ளைகளுக்கு காதுகுத்து விழாவில் ஒரு பகுதியாக அங்கிருந்த சாமிகளுக்கு கிடா வெட்டி பூஜை நடத்தப்பட்டது.

 

படையலிட்ட பிறகு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் கறி விருந்து வைக்கப்பட்டு அனைவரும் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த சிலர் சென்று அந்த கறி விருந்தில் கலந்து கொண்டு சாப்பிட்டுள்ளனர். அப்போது குமரவேல் உறவினர்களுக்கும் உள்ளூர் காரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் கோமங்கலம் காலனி பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கும், குமரவேல் அவரது உறவினர் சிவதாஸ் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

 

இதற்கு கோமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து குமரவேல் தரப்பைச் சேர்ந்த ரமேஷ், சக்திவேல் ஆகிய இரண்டு பேரை மட்டும் கோவிலுக்குள் வைத்து பூட்டி சிறை வைத்தனர். இது குறித்த தகவல் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக டிஎஸ்பி ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த கோமங்கலம் கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு உள்ளூர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் காதணி விழா நடத்த வந்த குமரவேல் தரப்பினர் தங்களை சாதி பெயரை சொல்லி திட்டினார்கள் அவர்களை கைது செய்ய வேண்டும் அதோடு அவர்கள் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அப்போதுதான் கோவிலை விட்டு அவர்களை வெளியே அனுப்புவோம் என்று கூறினர்.

 

போலீசார் கோவிலுக்குள் இருப்பவர்களை மீட்க அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பிறகு ஏழு மணி அளவில் கோவிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குமரவேல் உறவினர்கள் ரமேஷ், சக்திவேல் ஆகிய இருவரையும் போலீசார் வெளியே கொண்டு வந்தனர். அவர்களை அங்கிருந்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி அழைக்க செல்ல முயன்றனர். ஒரு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் உள்ளூர் மக்கள். இருப்பினும் போலீசார் அவர்களை சமாதானம் செய்து சிறை பிடிக்கப்பட்ட இரண்டு பேரையும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்த குறித்து போலீசார் தவறு செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். காதணி விழாவிற்கு வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கும் உள்ளுக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

முறையற்ற தொடர்பால் நிகழ்ந்த குடுமி பிடி சண்டை; காவல் நிலையம் முன்பு  பரபரப்பு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

nn

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரைச் சேர்ந்தவர் வாலிபர் ஒருவர். இவர் நகரின் மையப் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, பெற்றோர், தம்பி ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.

 

இந்நிலையில் வாலிபருக்கும் அவரது நண்பனின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது, நாளடைவில் முறையற்ற தொடர்பாக மாறியதால் வாலிபர் வீட்டை விட்டு வெளியேறி நண்பனின் மனைவியுடன் வேறு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். இரண்டு பேரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர் என்று கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் வாலிபரின் தந்தை திடீரென உயிரிழந்து விட்டார். தந்தையின் இறுதிச்சடங்குகள் செய்ய வாலிபர் தனது வீட்டிற்கு சென்றார். இறுதி சடங்குகள் முடிந்ததும் வாலிபரின் மனைவி, கணவரை முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணின் வீட்டுக்கு மீண்டும் செல்லவிடாமல் தடுத்து வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

 

கடந்த ஒரு வார காலமாக வாலிபருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண் அவரை பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை,  அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பெண் வாலிபரை பல இடங்களில் தேடினார். அப்போது அவர் தனது முதல் மனைவியுடன் வேறு ஒரு இடத்தில் வசித்து வருவதும் தெரிய வந்தது. அங்கு விரைந்து சென்ற அப்பெண் வாலிபர் வசித்து வரும் வாடகை வீட்டின் கண்ணாடிகளை கல் வீசி தாக்கியதோடு அங்கேயே கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து புகார் அளிப்பதற்காக சம்பந்தப்பட்ட செல்போன் கடை வாலிபர் தனது முதல் மனைவியுடன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு வாலிபர் புகார் அளிக்க வந்திருப்பது குறித்து தெரிந்தது, உடனே அவர் காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தார். அப்போது அங்கு வந்து இருந்த  வாலிபரை பிடித்த அந்தப்பெண் 'என்னுடன் வாழு வா' என சட்டையை பிடித்து இழுத்தார். அவர் வர மறுத்ததால் அவரை தாக்கினார்.

 

இதை பார்த்து கோபமான வாலிபரின் மனைவி, 'என் கணவரையா அடிக்கற' என கணவரின் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணை தாக்கினார். இது நகர காவல் நிலையம் முன்பாக  நடைபெற்றது. இரண்டு  பெண்களும் காவல் நிலையம் முன்பாக கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியான போலீசார், அவர்களை சமாதானம் செய்ய வந்து அடித்துக்கொண்ட இருவரையும் விலக்கி விட்டனர். அவர்கள்  போலீசாரையும் தள்ளிவிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

 

இதனை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்த நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் போலீசாரும், அங்கேயே உள்ள அனைத்து மகளிர் பெண் போலீசாரும் ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பெண் விவசாயியை வெட்டிய வடமாநில இளைஞர்; வெளுத்து வாங்கிய கிராம மக்கள்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

North State Youth attack Female Farmer; Bleached villagers

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று வழக்கம்போல் தனது விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார். அப்போது, அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மனையை கொண்டு திடீரென மகாலட்சுமியின் கையில் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. 

 

இதனை தொடர்ந்து, மகாலட்சுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அந்த ஊர் பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த வடமாநில இளைஞர் அங்கிருந்து தப்பிச்  சென்று அருகில் உள்ள ஒரு வீட்டின் மாடி பகுதியில் ஒளிந்துகொண்டார். இதனையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரை பிடிப்பதற்காக அருகில் சென்ற போது அரிவாள்மனையால் தாக்க முயன்றார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிடிக்க முடியாமல் அந்த இளைஞரிடம், ஹிந்தி மொழி தெரிந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர், இளைஞர் அருகில் சென்று நைசாக பேச்சு கொடுத்து கூல்டிரிங்க்ஸ் கொடுத்து சமாதானப்படுத்தினார். மேலும், இளைஞர் தனது கையில் வைத்திருந்த ஆயுதத்தை சாதுர்யமாக வாங்கி அப்புறப்படுத்தினார்.

 

இதையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்து சரிமாரியாக தாக்கினர். இதில், அந்த இளைஞருக்கு ரத்த காயம் ஏற்பட்டதை அடுத்து ஆட்டோவில் ஏற்றி, அவரை அழைத்து சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, பொதுமக்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டதில் அந்த இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயம் பார்த்து வந்த பெண்மணியை வடமாநில இளைஞர் ஒருவர் அரிவாள்மனையால் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்