Skip to main content

பெரியகுளம் அருகே இருதரப்பினர் மோதல்! எஸ்.பி. உட்பட பத்து போலீசார் படுகாயம்!!

Published on 15/06/2019 | Edited on 15/06/2019

தேனி மாவட்டத்தில் துணை முதல்வர் ஒபிஎஸ்சின் சொந்த ஊரான பெரியகுளம் அருகே உள்ள இலட்சுமிபுரத்தைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் சருத்துப்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்குமிடையே கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு நடந்த தகராறில் காயமடைந்த முரளி என்பவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

attack



இதனைத் தொடர்ந்து  இலட்சுமிபுரம் பகுதி பொதுமக்கள் நேற்று முன்தினம் முரளியைத் தாக்கிய சருத்துப்பட்டியைச் சேர்ந்தவர்களைக் கைது செய்யக் கோரி தேனியிலிருந்து பெரியகுளம் செல்லும் தேதிய நெடுஞ் சாலையில் திரண்டுசாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை சருத்துப் பட்டியைச் சேர்ந்தவர்கள் எனக் கருதி இரண்டு பேரையும் இலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர்கள் சரமாரியாகத் தாக்கினர்.  



காவல்துறையினர் அவர்களைமீட்டு விசாரித்தபோது இவர்கள் இருவரும் பெரியகுளம் தென்கரை இந்திராபுரியைச் சேர்ந்த அஜித்குமார் மற்றும் சுரேந்தர் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையறிந்த இவர்களது உறவினர்கள் பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் நேற்று  அஜித்குமார், சுரேந்தர் ஆகியோரை த் தாக்கிய இலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர்களை கைதுசெய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த  பெரியகுளம் காவல் துணைக்கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில்பேச்சு வார்த்தை நடத்தியதில் குற்றவாளிகளை கைது செய்வதாகக் கூறியதையடுத்து மறியலைக்கை விட்டனர்.

 

attack




இந்தநிலையில் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும்காவலர் சருத்துப்பட்டியைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவர் தேவதானப்பட்டி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவரை மர்ம நபர்கள் தாக்கியதில் காயம் அடைந்தார் எனவும், அவர் பெரியகுளம்அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக தேனி அரசு  மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தாக்கப்பட்டது இலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியதையடுத்து சருத்துப்பட்டி விலக்கில் பெரியகுளம் - தேனி தேசிய நெடுஞ்சாலையில்  சாலையில்  சாலை மறியலில்ஈடுபட முயன்றவர்களைக் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திக் கலைக்க முயன்றனர்.  

 

 

attack



அப்போது காவல்துறையினர் மற்றும் அந்த பகுதிமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு  ஏற்பட்டு பின்மோதலாக மாறி காவல்துறையினர்  தடியடி நடத்தவே சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கல்வீசித் தாக்கியதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உட்பட காவலர்கள் 10 பேர் காயமடைந்து பெரியகுளம் அரசுமருத்துவமனையிலும், தேனி க.விலக்கு அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று  வருகிறார்கள். 



இதில் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் கண் அருகில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவரை தேனி மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதனைத் தொடர்ந்து இலட்சுமிபுரம், சருத்துப்பட்டிஆகிய பகுதிகளில் தாக்கப்பட்டவர்களும், தாக்கியவர்களும், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பதட்டம் நிலவுகின்றது. மேலும் பதட்டத்தைத் தணிக்க நூற்றுக்கும் மேற்பட்டகாவல்துறையினர் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் மோதலில் ஈடுபட்டவர்களை விட்டுவிட்டு வீட்டில் தூங்கி  கொண்டிருந்தவர்களை காவல்துறையினர் அத்துமீறி  தாக்கியதில் சருத்துப்பட்டியை சேர்ந்த  ஜெயக்கண்ணண்,  முத்து,  முத்துநாகு, காளியம்மாள் ஆகிய நான்கு பேர்களை 20 க்கும் மேற்பட்ட  காவல்துறையினர் வீட்டின் மாடியில் ஏறி குதித்து வந்து  தாக்கியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இவர்களும் தேனி அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இச்சம்பவம்  தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.