Skip to main content

மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து! பைக்கில் வந்த இருவர் பலி! 

Published on 08/07/2022 | Edited on 08/07/2022

 

Bike Bus accident near cuddalore district two passed away

 

கடலூர் மாவட்டம், கடலூரில் இருந்து நேற்று இரவு ஒரு தனியார் பேருந்து 30 பயணிகளுடன் விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இரவு 7 மணி அளவில் குள்ளஞ்சாவடி அருகே பெரிய காட்டுசாகை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த பைக் மீது பேருந்து மோதியது. இதில் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடிய பேருந்து துணை மின் நிலையம் அருகே இருந்த சாலையோர மின்கம்பத்தில் மோதி நின்றது.


அப்போது மின் பொறி பட்டு பேருந்து திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பேருந்தின் டயர்கள் வெடித்தன. இதனால் பயணிகள் அனைவரும் அலறியடித்து பேருந்திலிருந்து இறங்கி ஓடினர். அருகிலிருந்தவர்கள் ஓடிச் சென்று பயணிகளை பத்திரமாக மீட்டனர். அவசரமாக பேருந்தில் இருந்து குதித்த முதியவர் ஒருவர் காயமடைந்தார்.


கடலூர் - சேலம் நெடுஞ்சாலையோரம் குள்ளஞ்சாவடி துணை மின் நிலையம் முன்பு பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் அவ்வழியே வாகனங்களில் சென்றவர்கள் பெரும் கூட்டமாக கூடினர். இதுகுறித்த தகவலின் பேரில் கடலூர், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் 30 நிமிடத்தில் பேருந்து முழுவதுமாக எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.


இந்த விபத்தில் பைக்கில் வந்த கடலூர் பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன் சபரிநாதன்(30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயத்துடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் செந்தில்குமார்(38) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இருவரும் உறவினர்கள்.


இந்த விபத்தால் கடலூர் - விருத்தாசலம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் உயர் மின் அழுத்த கம்பத்தில் பேருந்து மோதி தீப்பிடித்ததால் வழுதலம்பட்டு, அண்ணவல்லி, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட குள்ளஞ்சாவடி சுற்றுப்புற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.


இந்த விபத்து குறித்து குள்ளஞ்சாவடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.