Skip to main content

உடைந்த வாய்க்காலும்; உடனடியாக களத்திற்கு வந்த அமைச்சரும்...!

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

Because of the broken channel... and the minister who immediately came to the field...!

 

இயற்கை பேரிடர் காலங்களில் தமிழக முதல்வர் தொடங்கி தி.மு.க. அரசின் அமைச்சர்கள், அரசு நிர்வாகமும் துரிதமாக களப்பணியாற்றுவது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

புயல், மழை பாதிப்பைப் போலவே பாரம்பரியமான ஒரு பெரிய வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டால்..., அதிலிருந்து வெளியேறும் தண்ணீரால் விளைந்த பயிர்கள், மரம், செடி, கால்நடைகள்  முதல் பொதுமக்கள் வரை பெரிய அளவிலான பாதிப்பைத் தாங்க வேண்டியுள்ளது. ஆனால் அப்படியொரு பெரிய பாதிப்பை ஏற்படா வண்ணம், செய்தி கேள்விப்பட்டதும் சென்னையிலிருந்து ஈரோட்டை நோக்கி  சில மணி நேரத்திற்குள் விரைந்து வந்து களப்பணியில் நேரடியாக இறங்கினார் மூத்த அமைச்சரான சு.முத்துசாமி.

 

Because of the broken channel... and the minister who immediately came to the field...!

 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை மூலம் கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்படும் நீர் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு லட்சத்து ஏழாயிரம் விளை நிலங்கள் நேரடியாகப் பாசன வசதி பெறுவதுடன் மேலும் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் கசிவு நீரால் விவசாயம் செய்ய முடிகிறது., அதோடு கால்நடை வளர்ப்புக்கும் பல கிராம மக்களின் குடிநீர் தேவைக்கும் இந்த பவானிசாகர் அணை மூலம் வருகிற கீழ்பவானி வாய்க்கால் நீர் ஆதாரமாக உள்ளது.

 

இது போக கோபிசெட்டிபாளையம் அருகே தடப்பள்ளி - அரக்கன் கோட்டை வாய்க்கால் பாசனத்திற்காக பவானிசாகர் அணை நீர் பயன்பட்டு வருகிறது. மொத்தமாக அணையிலிருந்து 2000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் கீழ் பவானி வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவில் சென்று கொண்டிருந்தது.

 

இந்த நிலையில் பெருந்துறை, ஈரோடு ரோட்டில் உள்ள வாய்க்கால் மேடு அருகே கீழ்பவானி வாய்க்கால் நீர் செல்கிறது. இந்த வாய்க்காலின் தரைதளத்தில் கசிவு நீர் கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  10 ந் தேதி மாலை 4 மணி அளவில் திடீரென இந்த கசிவுநீர் கான்கிரீட் பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கசிவுநீர் செல்லும் பாதையில் வெள்ளம் புகுந்து தண்ணீர் வெளியேறத் தொடங்கியது. அன்றைய இரவில் வாய்க்காலின் கரையிலும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் வாய்க்காலில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறியது. இந்த தண்ணீர் பாலப்பாளையம், சின்னியம்பாளையம், கூரப்பாளையம், மூலக்கரை, நஞ்சனாபுரம், செங்கோடம் பாளையம் எனச் சுற்றுவட்டார கிராமங்கள் செல்லும் வழியில் உள்ள தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

 

Because of the broken channel... and the minister who immediately came to the field...!

 

தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் நெல், மஞ்சள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பயிர்கள் நீரில் மூழ்கின. சுமார் 400 ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். மேலும் வாய்க்கால் மேட்டில் இருந்து பாலப்பாளையம், சின்னியம்பாளையம் மற்றும் கூரப்பாளையம் செல்லும் தார் ரோடுகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் ரோடுகளில் அரிப்பு ஏற்பட்டன. அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. போக்குவரத்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. தவிர வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட கரையிலும் எதிர்புற கரையிலும் மண் அரிப்பு ஏற்பட்டு அந்த வழியாகவும் தண்ணீர் வெளியேறும் சூழ்நிலை உருவானது. மேலும் மூலக்கரை, நஞ்சனாபுரம் பகுதியில் உள்ள வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் பொது மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.

 

சென்னையிலிருந்த அமைச்சர் முத்துசாமிக்கு இது குறித்த தகவல் சென்றதும் அதிகாரிகளை உடனடியாக அங்கு செல்ல உத்தரவிட்டார். அதேபோல் பவானி சாகர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரை நிறுத்தவும் ஆணையிட்டார். மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் போலீசார் கரை உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

 

இந்நிலையில் பாலப்பாளையம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான டெக்ஸ்டைல்ஸ் மில் செயல்பட்டு வருகிறது. இங்கு வட மாநிலத்தவர்கள், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர்  வேலை பார்த்து வருகின்றனர். வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேறிய தண்ணீர் அந்த டெக்ஸ்டைல்ஸ் மில்லை சுற்றிலும் சூழ்ந்து நின்றது. இதனால் அங்கு இரவு நேரப் பணியில் இருந்த தொழிலாளர்கள்  வெளியில் செல்ல முடியாமல் சிக்கித் தவித்தனர். 

 

இது சம்பந்தமாகப் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்துக்கு வந்தனர். இரவு நேரம் என்பதால் மீட்பதில் சிரமம் இருந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி அரண் போல் நின்று மில்லிலில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் அனைவரையும் பத்திரமாக வெளியே கூட்டி வந்தனர். மேலும் அருகே உள்ள கிராமங்களிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்தப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். அந்த இரவில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானிக்கு வாய்க்காலுக்கு திறக்கப்பட்ட தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டது.

 

இந்த நிலையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த  வாழை, நெல், மஞ்சள், கரும்பு போன்ற பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் தங்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உன்னி கூறியிருக்கிறார். 

 

சென்னையிலிருந்து 11 ந் தேதி காலையில் ஈரோடு வந்த அமைச்சர் முத்துசாமி நேரடியாகக் கரை உடைப்பு ஏற்பட்ட வாய்க்கால் பகுதிக்குச் சென்று கரையைப் பலப்படுத்தும் பணியைத் தொடங்கினார். இரண்டு நாட்களாக அடிக்கடி அங்கேயே முகாமிட்டு வேலைகளைத் துரிதமாகச் செய்ய வைத்து விட்டே 12 ந் தேதி மாலை சென்னை கிளம்பினார். துறை ரீதியான பணிகளுக்காக சென்னையில் இருந்த அமைச்சர் ஒரு பிரதான வாய்க்காலின் கரை உடைந்துவிட்டது என்ற தகவல் கேள்விப்பட்டதும் விரைந்து வந்து களப்பணியாற்றியது விவசாயிகள், மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.