Skip to main content

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை! 

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

Bathing in Courtalam main waterfall prohibited
கோப்புப்படம்

 

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

 

அதே சமயம் தொடர் விடுமுறை மற்றும் பள்ளி மாணவர்களுக்குக் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் மெயின் அருவிகளில் குளிக்க வந்திருந்தனர். இந்த சூழலில் இந்த தடை உத்தரவின் மூலம் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்