Skip to main content

தடை செய்யப்பட்ட பயோடீசல் மீண்டும் புழக்கத்தில்..?

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

l banned Biodiese came for acirculation

 

இந்திய முழுவதும் பயோடீசல் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்து, அதைப் பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடும் விதித்துள்ளது. தற்போது தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பயோ டீசல் விற்பனை துவங்கியுள்ளது. பயோ டீசல் என்பது குருடாயில் என்று சொல்லப்படும் கழிவில் மண்ணெணய் கலந்து பயன்படுத்துவது. கச்சா எண்ணெயின் இறுதி கழிவான அதில் இருந்து தயாரிக்கப்படும் இந்த ஆயில், லாரி உள்ளிட்ட கனரக டீசல் இன்ஜின் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும்.

 

ஆனால், இந்த ஆயில் பயன்படுத்தும் வாகனங்களில் உள்ள பம்புகள் பழுதடைவதால், இதனை தமிழக அரசு தடை செய்தது. தற்போது கரூர் பகுதிகளில் உள்ள குவாரிகளில் இந்தப் பயோடீசல் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் சரக்கு லாரிகள் வைத்திருக்கும் முதலாளிகளும் சிறிய அளவில் லாரிகள் வைத்திருக்கும் முதலாளிகளும் இந்தப் பயோ டீசலை பயன்படுத்துகின்றனர். இதனால் அரசு நடத்தக்கூடிய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்டவை மூலம் விற்பனை செய்யப்படும் சுத்தமான டீசல் விற்பனையாகாமல், அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பை தருகிறது. 

 

இந்தப் பயோ டீசல் முழுமையாக மத்திய அரசால் தடை செய்யப்பட்டிருந்தும் ஆந்திரா, கோவா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து லாரிகள் மூலம் நள்ளிரவில் தமிழகத்திற்குள் கொண்டுவரப்பட்டு, சில குறிப்பிட்ட டீலர்கள் அதனை 50க்கும் அதிகமான பேரல்களில் நிரப்பி வைத்து, அவர்களுடைய குவாரிகளுக்குப் பயன்படுத்துவதோடு விற்பனையும் செய்கின்றனர். தற்போது ஒரு லிட்டர் டீசலின் விலை 86 ரூபாய் என அரசு நிர்ணயித்திருக்கும் நிலையில், இந்தப் பயோ டீசலின் விலை 74 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 12 ரூபாய் விலை குறைவாக விற்கப்படும் இந்தப் பயோடீசலை மட்டுமே லாரி உரிமையாளர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். 

 

லாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி, 35 லிட்டர் - 50 லிட்டர் கேன்கள் மூலம் அவற்றை சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனர். டீசல் என்ஜின் பயன்படுத்தக்கூடிய நான்கு சக்கர இலகுரக வாகனங்கள், கார் உள்ளிட்டவை இந்தப் பயோ டீசலைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பயோ டீசல் பயன்பாட்டைத் தடுக்கவும், அவற்றின் கொள்முதலை தடை செய்யவும் தமிழகம் முழுவதும் உணவு கலப்பட தடுப்பு பிரிவு டிஎஸ்பிக்கள் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

அதில் 3 டிஎஸ்பிக்கள், ஆந்திரா மற்றும் கோவாவில் இருந்து கொண்டு வரப்படும் பயோ டீசலை தமிழகத்திற்குள் வருவதற்கு அனுமதிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள லாரி உரிமையாளர்கள் மற்றும் பயோ டீசல் வாங்கி மொத்தமாக விநியோகிக்கும் ஏஜென்டுகள் ஆகியோரிடமிருந்து மாதம் தவறாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதனைப் பயன்படுத்துவதற்கும் விற்பதற்கும் அனுமதி அளித்துள்ளனர். அதிலும், 200 முதல் 500 வரையிலான சரக்கு லாரிகள் வைத்திருக்கக்கூடிய முதலாளிகளோடு நேரடி தொடர்பில் இருக்கக்கூடிய டிஎஸ்பிக்கள், சட்டரீதியாக எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் அதை சமாளிப்பதற்கு தயாராகவும் உள்ளனர். எனவே மத்திய அரசும், தமிழக அரசும் இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணுமா?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.