Skip to main content

பாலகிருஷ்ணன் ஐபிஎஸ்க்கு லண்டன் தமிழ்ச்சங்கம் பாராட்டு

Published on 09/09/2018 | Edited on 09/09/2018

 

lo

 

பாலகிருஷ்ணன் ஐ பிஎஸ் சாதாரண கிராமத்தில் பிறந்து வேளாண்மையியலில் முதுகலை பட்டம் படித்து. 2003 ஆம் ஆண்டு இ .கா . பணிக்கு தேர்வு செய்யப்பட்டு. தான் பணியாற்றிய அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக பணியாற்றியவர் (திருப்பூர், திருவண்ணாமலை. மதுரை. மயிலாப்பூர். விலுப்புரம்.). கடைசியாக மெரினாவில் நடந்த ஜல்லிகட்டு போராட்டத்தின்போது மயிலாப்பூர் துணைஆனையராக ச, சிறப்பாக போராட்டத்தை  கையாண்டு பணியாற்றினார். கடைசியாக பணி உயர்வு பெற்று விலுப்புரம் சரக காவல் துணை தலைவராக பனியாற்றி. தற்போது அரசு சலுகையில் இங்கிலாந்து பல்கலைகழகத்தில் மனித உரிமை பாடத்தில் உயர் கல்வி படிக்க ஒரு ஆண்டிற்கு முன் லண்டன் சென்று, தனது படிப்பை முடித்து சென்னை திரும்பும் அவருக்கு லண்டன் தமிழ் சங்கம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராணி எலிசபெத்தின் மறைவு; நேரில் செல்லப்போகும் அமெரிக்க அதிபர்

Published on 10/09/2022 | Edited on 10/09/2022

 

Queen Elizabeth passed away; The President of the United States is going to visit in person

 

இங்கிலாந்து ராணி எலிசபெத் உயிரிழந்தார். அவருக்கு வயது 96. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பிலிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். இவர், கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்தார்.பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், கடந்த ஆண்டு ஏப்ரல் 9, 2021-ல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ராணி எலிசபெத்தின் மறைவை ஒட்டி அவருக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இங்கிலாந்துக்கே நேரில் சென்று அஞ்சலி செலுத்த இருக்கின்றனர். மறைவு குறித்தான இரங்கல் பதிவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எலிசபெத் ஒரு சகாப்தத்தைக் காட்டிலும் மேலானவர் என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இரண்டாம் எலிசபெத் அவரின் தைரியம் மற்றும் கருணைக்காக உலகம் என்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் எனக் கூறியுள்ளார்.

 

இந்நிலையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துகொள்ள உள்ளார். கொலம்பஸில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இருப்பதாகவும் இன்னும் மன்னர் சார்லசிடம் இன்னும் பேசவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் "அமெரிக்க நாட்டின் சார்பில் இங்கிலாந்து மக்களுக்கும், இங்கிலாந்து அரசுக்கும் மற்றும் அரச குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார். 

 

 

Next Story

இரண்டாம் எலிசபெத் மகாராணி மறைவு; உலகத்தலைவர்கள் இரங்கல் 

Published on 09/09/2022 | Edited on 09/09/2022

 

passed away Elizabeth II; World leaders mourn

 

இங்கிலாந்து ராணி எலிசபெத் உயிரிழந்தார். அவருக்கு வயது 96. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பிலிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். இவர், கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்தார்.பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், கடந்த ஆண்டு ஏப்ரல் 9, 2021-ல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரிட்டன் ராணி உயிரிழந்ததால் பல்வேறு உலகத் தலைவர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், எலிசபெத் ஒரு சகாப்தத்தைக் காட்டிலும் மேலானவர் என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இரண்டாம் எலிசபெத் அவரின் தைரியம் மற்றும் கருணைக்காக உலகம் என்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் எனக் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, ராணி எலிசபெத் அவர்களின் மறைவு வேதனை அளிப்பதாகக்  குறிப்பிட்டுள்ளார். 

 

பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற லிஸ் ட்ரஸ் ராணியின் மறைவு பேரிழப்பு எனக் கூறியுள்ளார்.  உலகம் ஒரு ஆளுமையை இழந்து விட்டது என இந்தியக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 7 தசாப்தங்கள் நீடித்த எலிசபெத் ராணியின் ஆட்சி 15 பிரதமர்கள் மற்றும் நவீன வரலாற்றில் பல திருப்பங்கள் கண்ட எலிசபெத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நீண்டகாலம் ஆட்சி பீடத்திலிருந்த எலிசபெத் ராணி, தனது நாட்டுக்காகக் கண்ணியத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றினார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

 

ராணி எலிசபெத்தின் உடல் 10 நாட்களுக்குப் பின் நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாகவும் 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.