Skip to main content

விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் லாக்கப்பில் கொல்லப்பட்டாரா? மார்க்சிஸ்ட் கட்சி சாலைமறியல் போராட்டம்!

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் காவல்துறையை சார்ந்த தனிபிரிவு காவலர் பார்த்திபன் மற்றும் காவலர் ராஜா ஆகியோர் வியாழக்கிழமை காலை பேருந்துநிலையம் அருகேயுள்ள ஸ்டேட் பேங்க் பணம் எடுக்கும் இயந்திரம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்றிருந்தார் என்று அவரை பிடித்து விசாரணைக்கு காட்டுமன்னார் கோவில் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

prison


விசாரணையில் அவர்  காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள உருத்திரசோலை கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன் வினோத் (25) என்பது தெரிந்தது. இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களுக்கு உதவி செய்வது போல நடித்து நூதனமான முறையில் மோசடி செய்து பணம் திருடுபவர் என்றும் அவரது வீட்டிலிருந்து 6 ஏடிஎம் கார்டுகள் மற்றும் பல்வேறு பகுதியில் பணம் எடுத்ததற்கான குறிப்புகள் அடங்கிய சீட்டு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக. காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்நிலையில் புதன் இரவு வினோத் அடைக்கப்பட்ட லாக்கப்பில் ஏதோ சத்தம் கேட்க காவலர்கள் ஓடிச்சென்று பார்த்த போது வினோத் தான் கட்டியிருந்த வேட்டியால் அங்குள்ள ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு கிடந்தார். காவலர்கள் அவரை மீட்டு காட்டுமன்னார்கோயில் அரசுமருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது ஏற்கனவே வினோத் உயிரிழந்துள்ளார் என்று தெரியவருகிறது.. பின்னர் காவல் துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

prison

இது குறித்து  தகவலறிந்த வினோத்தின் அப்பா மூர்த்தி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்  அரசு மருத்துவமனையின் வெளி பகுதியில் திரண்டனர். தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்புராயன், அசோகன், கீரைப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன், குமராட்சி ஒன்றிய செயலாளர் மூர்த்தி, வட்டக்குழு உறுப்பினர் காளிதாஸ் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் இறந்துபோன வினோத்தின் உறவினர்கள் காவல்துறையினர் வினோத்தை அடித்து கொலை செய்துவிட்டு உண்மையை மறைக்கிறார்கள் என்றும் சம்பந்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விசாரணைக்கு அழைத்து சென்ற காவலர்கள் பார்திபன் மற்றும் ராஜாவை பணிநீக்கம் செய்து விசாரணை நடத்தவேண்டும்.  இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..

இதுகுறித்து வினோத்தின் அப்பா மூர்த்தி கூறுகையில் எனது மகனை விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்று அடித்துள்ளனர். அவனை காவல்நிலையம் அழைத்து சென்றது குறித்து எந்த தகவலையும் எங்களுக்கு கூறவில்லை. விசாரணையின் போது உடலின் முக்கியமான இடத்தில் அடிபட்டு இறந்துள்ளார். அதனை மறைக்க இவர்கள் இதுபோன்று நாடகமாடுகிறார்கள். வினோத்தை விசாரணைக்கு அழைத்து சென்ற காவலர்களான பார்த்திபன் மற்றும் ராஜா காவல்நிலையத்தில் வைத்து வினோத்தை அடித்ததை எங்க ஊரில் உள்ளவர்கள் பார்த்துள்ளனர். இது அவர்கள் லாக்கப்பில் செய்த கொலை தான் என்று குற்றம்சாட்டுகிறார் வினோத்தின் அப்பா.

prison


இதனைதொடர்ந்து விழுப்புரம் சரக டிஐஜி. சந்தோஷ்குமார், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் ஆகியோர் காட்டுமன்னார்கோவிலில் முகமிட்டு விசாரணை நடத்தினர். இது குறித்து விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ் குமார் கூறுகையில், வினோத்  நூதன முறையில் ஏடிஎம் மில் பண மோசடி செய்வது வழக்கம். இவர் மீது காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்தில் இரண்டு வழக்குகள் உள்ளன.மேலும் கரூரில் ஒரு வழக்கு உள்ளது. நேற்று மாலை ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் ஜெகதீசனிடம் ஏடிஎம் மில் மோசடி செய்து  ரூ1200 மோசடி செய்துள்ளார்.

இதனையொடுத்து வினோத்தை  காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.  பின்னர் அவர் வீட்டில் இருந்து 6 ஏடிஎம் கார்டு மற்றும் பல்வேறு பகுதிகளில் மோசடி செய்த குறிப்புகள், ரூ 12 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்தனர். தான் திருடன் என தனது கிராமத்தினருக்கு தெரிந்ததால், அவமானம் என மன வேதனையடைந்த வினோத் காவல் நிலையத்தில் உள்ள லாக்கப்பில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடல் பிரேத பிரசோதனைக்காக கடலூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. கடலூர்  மாஜிஸ்திரேட் மற்றும்  சார் ஆட்சியர் முன்னிலையில் இரண்டு மருத்துவர்கள் அவரது உடலை பிரேத பிரசோனை செய்ய உள்ளனர். இது வீடியோ ரெக்கார்டிங் மூலம் பதிவு செய்யப்படும்.மேலும் இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் தகவல் கொடுக்கப்படும். அதன் அடிப்படையிலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.