Skip to main content

தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்த குட்டி பாம்புகள்; ஒருவர் கைது

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

Baby snakes smuggled from Thailand; One arrested

 

தாய்லாந்தில் இருந்து விமானத்தில் சென்னை வந்த நபர் ஒருவர் பாம்புக் குட்டிகளைக் கடத்தி வந்த நிலையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் என்ற விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது ஒருவர் இரண்டு பெரிய பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்தார். சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு பைகளை சோதனையிட்டனர். அப்பொழுது அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகளைத் திறந்து பார்த்தபோது அதிகாரிகள் பதறி அடித்து ஓடினர். அந்த கூடைக்குள் பல குட்டி பாம்புகள் நெளிந்து கொண்டிருந்தன. ஆனால் அந்த பாம்புகளை எடுத்து வந்த நபரோ கூலாக 'பயப்படத் தேவையில்லை இவை ஒன்றும் கடிக்காது. இவை ரப்பர் பாம்புகளைப் போன்ற விஷமற்ற பாம்புகள்' என அசால்டாக கையில் எடுத்து பிடித்துக் காட்டினார். ஆனால் அதிகாரிகள் உடனடியாக அந்த நபரை கைது செய்தனர்.

 

பிடிபட்ட பாம்புகள் அனைத்தும் மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்பப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிலர் இதுபோன்ற பாம்பு குட்டிகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். இதனால் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் பாம்புகளைக் கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளக்காடான சென்னை; ஆம்புலன்ஸ்கள் செல்ல சிறப்பு ஏற்பாடு

Published on 04/12/2023 | Edited on 04/12/2023

 

Flood-prone Chennai; Special arrangement for ambulances

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் பல்வேறு இடங்களில் ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்  சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் கீழ்பாக்கம் மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ் செல்ல சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளுக்கும் ஆம்புலன்ஸ்கள்  சிக்கல் இல்லாமல்  செல்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வழித்தடங்களை சென்னை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

கனநேரத்தில் 40 அடி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள்; வேளச்சேரியில் சோகம்

Published on 04/12/2023 | Edited on 04/12/2023

 

 The workers were momentarily trapped in a 40-foot ditch; Tragedy in Velachery

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் ஐந்து பரலாங் சாலையில் 40 அடி பள்ளத்தில் ஐந்து தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் ஏற்பட்ட பள்ளத்தில் தொழிலாளர்கள் உள்ளே விழுந்தனர். தற்போது வரை மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திடீர் பள்ளத்தில் சுற்றியுள்ள மழை நீர் இறங்கி வருகிறது. கனநேரத்தில் நிகழ்ந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விரிவான அலசல் கட்டுரைகள்