Skip to main content

பிறந்து ஒரே நாளான குழந்தை இறப்பு! மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்! 

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

Baby dies on the same day as birth! Relatives besieging the hospital!

 


ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள அடையன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பத், மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மங்கையர்க்கரசி இவர்களுக்கு 4 வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது.

 

இந்த நிலையில் மங்கையர்க்கரசி மீண்டும் கர்ப்பமுற்றார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மங்கையர்க்கரசிக்கு சென்ற இரண்டு நாட்களுக்கு முன் 19ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிரசவத்திற்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அன்று காலையிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருந்து வந்தனர். இந்நிலையில் 21ந் தேதி காலை 7 மணிக்கு மங்கையர்க்கரசி தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து உள்ளார். பின்னர் அவருக்கு கருத்தடை ஆபரேஷன் செய்வதற்காக ஆஸ்பத்திரியில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு பணியாளர்கள் அழைத்துச் சென்றனர்.

 

அப்போது குழந்தை மட்டும் தனியாக இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு பணியில் இருந்த செவிலியர் ஒருவர் அந்த குழந்தையை வந்து பார்த்த போது அது பேச்சு மூச்சின்றி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தையின் தாய் மங்கையர்க்கரசி மற்றும் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மங்கையர்க்கரசி உடனடியாக கருத்தடை ஆபரேஷன் செய்யாமல் குழந்தையை பார்க்க வந்தார். அப்போது அவரது உறவினர்களும் பிரசவ வார்டில் திரண்டு வந்து மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். குழந்தைக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி அங்கிருந்த மருத்துவமனை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது மங்கையர்க்கரசியின்  உறவினர்களில் சிலர் கோபத்தில் ஆஸ்பத்திரியில்  இருந்த கண்ணாடியை உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஈரோடு தலைமை மருத்துவமனை போலீசார்,  மருத்துவர்கள் அங்கு விரைந்து வந்து உறவினர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் குழந்தையின்  உறவினர்கள் சரியான முறையில் மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சை அளிக்கவில்லை. அதனால் மங்கையர்க்கரசியை இங்கிருந்து அழைத்துச் செல்கிறோம் என்று அவரை  வெளியே அழைத்து வந்தனர். ஆஸ்பத்திரி நுழைவாயிலில் மீண்டும் அவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மங்கையர்க்கரசி திடீரென மயங்கி விழுந்தார்.  

 

இதனால் அவரை மீண்டும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் தொடர்ந்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் மங்கையர்க்கரசி கணவர் சம்பத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மருத்துவர்களும், காவல்துறையினரும் தீர விசாரித்த பிறகே குழந்தை இறப்பின் காரணம் குறித்துத் தெரியவரும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.