Skip to main content

இஸ்லாமிய அமைப்புக்கு அட்வைஸ்!! இந்து அமைப்புகளுக்கு ஏன் இல்லை ? காவல்துறையில் பாரபட்சம்...

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

அயோத்தியில் பாபர் மசூதி, கடந்த காலத்தில் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினரால் இடிக்கப்பட்டது. அந்தயிடத்தை இந்து அமைப்புகளும் – இஸ்லாமிய அமைப்புகளும் உரிமைக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. அந்த வழக்கு பல ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது.
 

ayodhya verdict


அனைத்து தரப்பின் வாதங்கள், விசாரணைகள் முடிந்தநிலையில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாகிவிடும் என்கிற எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் உள்ளது. இந்த தீர்ப்பின் மூலமாக நாட்டில் எந்தவித மத மோதல்களும், கலவரங்களும் ஏற்பட்டுவிடக்கூடாதுயென மாநில அரசுகளை, இந்திய ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநில அரசும் அதற்கான பணிகளில் இறங்கியுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, வேலூர், விஷாரம், ஆற்காட்டில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இஸ்லாமிய மதத்தின் முக்கியஸ்தர்களை அழைத்து காவல்துறை பேசிவருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆம்பூர் நகர காவல்துறையின் சார்பில், அயோத்தி தீர்ப்பு வெளியாகும்போது, அதனை எதிர்க்கிறோம் என்றோ அல்லது மகிழ்கிறோம் என தங்களது உணர்சிகளை வெளிப்படுத்தாமல் அமைதி காக்க வேண்டும் என இஸ்லாமிய மதத்தின் முத்தவல்லிகள், இசுலாமிய அமைப்புகள், இசுலாமிய அரசியல் கட்சி பிரமுகர்களிடம் வேண்டுக்கோளை வைத்தனர். அவர்களும் எங்களால் எந்த தொந்தரவும், பிரச்சனையும் வராது என வாக்குறுதி அளித்துவிட்டு சென்றுள்ளனர்.

இதுபோல் ஏன் இந்து இயக்கங்கள், அரசியல் கட்சியினரை அழைத்து பேசவில்லை என்கிற கேள்வியை காவல்துறை முன்பு வைக்கின்றனர் பகுத்தறிவாளர்கள். அயோத்தி வழக்கு என்பது இரு மத மக்களுக்கானது. பாபர் மசூதியை இடித்தது இந்து அமைப்பினர் என்பது குறிப்பிடதக்கது. அதன்பின்பே மதக்கலவரம் ஏற்பட்டது.


அப்படிப்பட்ட முன்வரலாறு உள்ளநிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் இந்து அமைப்புகள், முக்கிய பிரமுகர்கள், கட்சிகள் அமைதி காக்க வேண்டும் எனச்சொல்லி ஏன் காவல்துறை கூட்டம் நடத்தவில்லை என்கிற கேள்வி பல மட்டங்களிலம் எதிரொலிக்கிறது. காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் என்ன சொல்லப்போகிறார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் ரம்ஜான்; தேதியை உறுதி செய்த தலைமை காஜி

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
nn

ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும் இந்த நாளில் ஏழை மக்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை அளித்து ஈகையை வெளிப்படுத்தும் நன்னாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறை தென்படுவதன் அடிப்படையில் ரமலான் மாதம் 29 நாட்களா அல்லது 30 நாட்களா என்பது முடிவு செய்யப்படுகிறது.  இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று பிறை தென்படாததால் நாளை மறுநாள் (11/04/2024) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். 

Next Story

ஒவ்வொரு இஸ்லாமியரும் சி.ஏ.ஏ.வை வரவேற்க வேண்டும்” - அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் 

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
All India Muslim Jamaat President says Every Muslim should welcome CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று மாலை முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தந்திருக்கிறார். இது தொடர்பாக, அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷகாபுதீன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தை நான் வரவேற்கிறேன். இதற்கு முன்பே இதனை செய்திருக்க வேண்டும். இந்த சட்டம் தொடர்பாக இஸ்லாமியர்கள் இடையே பல தவறான புரிதல்கள் உள்ளன. இந்த சட்டத்தினால், இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதம் சார்ந்து அராஜகங்களை சந்திக்கும் இஸ்லாமியர் அல்லாதோர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் இதற்கு முன்பு எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. எனவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தால், இந்திய இஸ்லாமியர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். இந்தச் சட்டம் எந்த இஸ்லாமியரின் குடியுரிமையையும் பறிக்கப் போவதில்லை. கடந்த ஆண்டுகளில், தவறான புரிதல்கள் காரணமாக, இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. சில அரசியல்வாதிகள், இஸ்லாமியர்கள் இடையே தவறான புரிதலை ஏற்படுத்தினார்கள். இந்தியாவின் ஒவ்வொரு இஸ்லாமியரும் சி.ஏ.ஏ.வை வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.