Skip to main content

மரங்களின் காதலர் விதைத்த விழிப்புணர்வு... பிறந்தநாளில் கடல் கடந்து நட்டப்பட்ட மரக்கன்றுகள்!!  

Published on 30/11/2020 | Edited on 30/11/2020

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில், சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர், கற்பகசோலை 'மரம்' பெ.தங்கசாமி. சராசரி விவசாயியாக இருந்த மரம் தங்கசாமி, விவசாயத்தில் நட்டம் ஏற்பட்டு கடனாளியாக இருந்தார். இவரின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது, அவரது திருமணம். திருமணக் கோலத்தோடு தனது தோட்டத்தில் மரக்கன்று நட்டு தனது இல்லறவாழ்வைத் தொடங்கினார்.

 

அதன் பிறகு, தேசியத் தலைவர்கள் தொடங்கி உள்ளூர் தலைவர்கள் என அனைவரின் பிறந்த நாள், நினைவு நாள் என எந்த ஒரு நாளாக இருந்தாலும் அவர்கள் நினைவாக ஒரு மரக்கன்றை தன் தோட்டத்தில் நட்டார். மழை, வறட்சி அத்தனையும் தாங்கி வளரத் தொடங்கியது மரங்கள். பழ மரங்களைத் தேடி பறவைகள் வந்து, பலவகை மரக்கன்றுகளுக்கு விதைபோட்டது. நட்ட மரங்களைவிட பறவைகளால் விதைக்கப்பட்ட மரங்கள் அதிகம். இப்படித் உருவான தோட்டத்தின் மரங்கள், அவரின் கடனை அடைக்க உதவியது.

 

Awareness sown by the lover of trees ... on a birthday Planted saplings

 

மரங்களால் தனக்கு நட்டமில்லா வருமானம் கிடைப்பதை மற்றவர்களிடமும் கொண்டுசெல்ல நினைத்து, தான் கலந்து கொள்ளும் திருமணம், காதணி போன்ற விழாக்களில், மரக்கன்றுகளை நடுவதுடன், மணமக்களுக்கு மரக்கன்றுகளைப் பரிசாகக் கொடுத்து வந்தார். தொடர்ந்து பள்ளி, அலுவலகங்களில் சுதந்திர தினம், குடியரசு தினம், ஆண்டு விழாக்களில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு, விழாக்களை தொடங்கி வைத்தார். இப்படித் தொடங்கிய அவரது இயற்கைப் பயணம் தமிழ்நாடு முழுவதும் விரிவடைந்தது. ஆண்டுக்கு ஒருமுறை சைக்கிளில் தமிழகம் முழுவதும் சுற்றி மரக்கன்றுகளை நடுவதுடன், பள்ளி, கல்லூரிகளில் மரக்கன்றுகளை வளர்க்க வேண்டியதற்கான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தினார். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாருடன் தொடர்ந்து பயணித்தார். இப்படியாக தொடர்ந்த அவரது பயணத்தில், விழாக்களில் தாம்பூலப் பைக்கு பதில் மரக்கன்றுகளைக் கொடுக்க வலியுறுத்தி வந்தார். 

 

'மரப்பயிரும் பணப்பயிரே' என்ற வாசகத்துடன் தொடங்கிய அவரது புரட்சிப் பயணம், அவரது இறுதிக் காலம் வரை தொடர்ந்தது. இவரது இந்தப் பயணத்தை தொடர்ந்து, கடந்த சில வருடங்களாக, இவரது பெயரில் தமிழகத்தின் பல ஊர்களிலும் குருங்காடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.

 

cnc

 

இந்நிலையில், இன்று நவம்பர் 30 ஆம் தேதி, மரம் தங்கசாமி பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, சிங்கப்பூர், மலேசியா, குவைத், அமெரிக்கா, மாலத்தீவு போன்ற பல நாடுகளிலும் மரக்கன்றுகள் நட்டுள்ளனர். ராமநாதபுரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பேரன் சேக்சலீம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். கீரமங்கலம் காவல்நிலைய வளாகத்தில் மெய்யநாதன் எம்.எல்.ஏ மற்றும் கைஃபா, நாம் தமிழர் கட்சியினர் மரக்கன்றுகளை நட்டனர்.

 

அதேபோல புதுக்கோட்டை, தஞ்சை  மாவட்டங்களில் கீரமங்கலம், செரியலூர், நெடுவாசல், அரசர்குளம், பேராவூரணி மற்றும் பல கிராமங்களிலும் மரக்கன்றுகள் நட்டுள்ளனர். அதேபோல பெங்களூரு, சென்னை, டெல்லி, செங்கல்பட்டு என இந்தியாவில் பல இடங்களிலும் தமிழகத்தில் ஏராளமான ஊர்களிலும் சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளனர்.

 

தனி ஒருவராக தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை விதைத்தார். ஆனால் இன்று இளைஞர்கள் ஏராளமானோர் விதைக்கிறார்கள். எல்லாம் அவர் விதைத்த விழிப்புணர்வு தான் என்கிறார்கள் இளைஞர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

முதல் கூட்டத்திலேயே முட்டிக் கொண்ட தி.மு.க. - காங்கிரஸ்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
DMK Congress which was knocked out in the first meeting

ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுயில் உள்ள அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியின் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திமுக புதுக்கோட்டை மா.செ அமைச்சர் ரகுபதி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ராமநாதபுரம் மா.செ. காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இந்தியா கூட்டணி ராமநாதபுரம் வேட்பாளர் கே.நாவஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கூட்டத்தில் பேச வந்த அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் பேசும், “இப்போது நாங்கள் கூட்டணி கட்சிக்கு வாக்கு சேகரிப்போம் ஆனால், அறந்தாங்கி தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அமைச்சர்கள் செய்து தர வேண்டும் இல்லை என்றால் தற்கொலை முயற்சியோடு அறிவாலயம் நோக்கி போவோம்” என்று பேசி கூட்டத்தில் சலசலப்பை உருவாக்கினார்.

அதனைத் தொடர்ந்து பேச வந்த காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் ராம.சுப்புராம் பேசும் போது, “அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவசரப் பணியாக டெல்லி சென்றுள்ளதால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் இன்றைய போஸ்டரில் அவர் படம் இல்லை இனிமேல் அச்சடிக்கும் போஸ்டர்களில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. படத்தையும் போட வேண்டும்” என்றார். மேலும் அமைச்சர் ராஜ. கண்ணப்பன் பேசும்போது, “நேற்று வேட்பாளர் அறிவிப்பு இன்று விஜயபாஸ்கர் வீட்டில் ரைடு. திராவிடர் இயக்கத்தை ஒழிக்க நினைக்கிறார்கள் பா.ஜ.க.வினர். அது ஒருபோதும் நடக்காது. பாசிக பா.ஜ.க. தான் நம்ம எதிரி அவர்களை வீழ்த்துவோம். அமைச்சர் மெய்யநாதன், “கடந்த முறை பெற்றுத் தந்த வாக்குகளைவிட அதிக வாக்குகளை பெற்றுத் தருவோம்” என்றார்.

DMK Congress which was knocked out in the first meeting

தலைமையுரையாற்றிய அமைச்சர் ரகுபதி, “முதல் கூட்டத்திலேயே சொல்கிறோம் சந்தோசமாக செல்லுங்கள், அறந்தாங்கி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தருவோம். ராமநாதபுரத்திற்கு குடிநீர் கொண்டு வருவதை நாங்கள் தடுக்கவில்லை. எங்களுக்கும் கொஞ்சம் வேண்டும் என்று தான் சொன்னோம்” என்றார். மேலும் உதயம் சண்முகத்திற்கு பதில் சொல்லும் விதமாக, “இந்த முறை ஏணிக்கு வாக்களியுங்கள் அடுத்த முறை (2026) தலைவர் விரும்பினால் உதயசூரியனுக்கு வாக்களிக்கலாம். அதே போல இனிமேல் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு போஸ்டரிலும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. படம் அச்சடிக்கப்படும்” என்று காங்கிரஸ் சுப்புராமுக்கும் பதில் கூறுவது போல பேசினார். இறுதியாக பேசிய வேட்பாளர் நவாஸ்கனி, “அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி அதிக ஓட்டுகள் பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

அறந்தாங்கி தொகுதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் படம் இல்லாமல் வடிவமைக்கப்பட்டதும், 2026 சட்மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடியவில்லை என்றால் அறிவாலயத்தில் தற்கொலை முயற்சி செய்வோம் என்று பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.