Skip to main content

தா.பேட்டை அரசு பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Published on 06/11/2021 | Edited on 06/11/2021
Awareness program held at  Government School

 

‘பாதுகாப்பும் பண்டிகையும்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி தா.பேட்டை  அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சசிகுமார் கலந்துகொண்டு பேசுகையில், “பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகம் கூடுவதால் நோய்த் தொற்று அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. 

 

எனவே தனிமனித பாதுகாப்பை உறுதிசெய்வது நமது சமுதாய கடமையாகும் என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பதும், மத்தாப்புகள் கொளுத்துவதும் நமது வழக்கமாக இருக்கிறது. பட்டாசு வெடிப்பதற்கான பாதுகாப்பு இல்லாமல் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உயிருக்கும் உடைமைக்கும் சேதம் ஏற்படக்கூடும். எனவே, அனைவரும் பாதுகாப்பாக பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அசத்தலாய் ஆண்டுவிழா நடத்திய அரசுப்பள்ளி!

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Chennai middle school annual day celebrations

சென்னை நொளம்பூர் பகுதியில் இயங்கி வரும் நடுநிலைப்பள்ளியின் 2023-24 கல்வி ஆண்டிற்கான ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. நிகழ்விற்கு வருகைபுரிந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்களை பேண்ட் வாத்தியங்கள் முழங்க தலைமையாசிரியரும், மற்ற ஆசிரியர்களும் வரவேற்றனர். நிகழ்வானது எல்கேஜி மாணவிகளின் நடனத்துடன் ஆரம்பமானது. எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் வகுப்பு வாரியாக கருத்தாழமிக்க நாடகங்கள், வண்ண உடையுடனும் கூடிய நடனங்களை நிகழ்த்திக் காண்பித்தார்கள். இது காண்போரை ரசிக்க வைத்தது

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போதைய சென்னை மாநகராட்சியின் 143வது மாமன்ற உறுப்பினருமான வே.ராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி சிறப்புரையாற்றினார். வண்ண வண்ண கொடிகளாலும், விளக்குகளாலும் அப்பகுதி முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருந்தது. முகப்பேர், நொளம்பூர், மதுரவாயில் சுற்று வட்டாரப் பகுதியில் அதிகப்படியான தனியார் பள்ளிகள் இயங்கி வந்தாலும் அதற்கு நிகராக அரசுப் பள்ளியும் சிறப்பாய் திகழ முடியும் என்று, இந்த ஆண்டு விழாவை தலைமையாசிரியரும் மற்ற ஆசிரியர்களும் சிறப்பாக நடத்திக் காட்டியிருக்கிறார்கள். 

Next Story

மாணவர்களின் விழிப்புணர்வு மெளன நாடகம்; வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சி

Published on 05/11/2023 | Edited on 05/11/2023

 

School students awareness silent play Motorists are resilient

 

ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியரின் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரோட்டின் மையப்பகுதிகளான ஆட்சியர் அலுவலகம், பன்னீர் செல்வம் பூங்கா மற்றும் காளை மாடு சிலை ஆகிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் சுப்புலட்சுமி தலைமை தாங்கி விழிப்புணர்வு மௌன நாடகத்தை தொடங்கி வைத்தார்.

 

அப்பொழுது, தங்கள் வருகைக்காக காத்திருப்பவர்கள் முன்னால், மௌன நாடகம் (MIME) மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பறை முழங்க இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் மூன்று பேர் பயணித்து விபத்தில் சிக்கி உயிர் இழக்கும் நிலை, மது போதையில் இருசக்கர வாகனத்தை இயக்கி இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிக்கப்படும் நிலை, இதனால் ஏற்படும் உயிர் சேதம், பொருள் சேதம், பாதிப்பு உள்ளிட்டவைகளை தத்ரூபமாக மௌன நாடகம் மூலம் அரங்கேற்றினர். இதனால் வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

 

மேலும், சாலை விதிகைளைப் பயன்படுத்தி, சீட்பெல்ட் அணிந்தும், ஹெல்மெட் அணிந்தும் வந்த வாகன ஓட்டிகளுக்கு பூங்கொத்து வழங்கி ஊக்குவித்தனர், விதிகளை மீறியவர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சிறிய வடிவிலான ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன. இதில் 50 தனியார் மாணவ மாணவியர் மற்றும் 20 ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர்.