Skip to main content

மின்னல் மற்றும் புயல்..மீனவர்களுக்காக CD வெளியீடு..

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு முகாம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
 

Awareness CD released


இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி, வருவாய் துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் விஸ்வநாதன், தீயணைப்பு மற்றும் மீட்பு குழு பொறுப்பு ஆணையர் சைலேந்திரபாபு  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீனவர்களுக்கான 'மின்னல் மற்றும் புயல்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு CDயை வெளியிட்டார். அதை வருவாய் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பெற்றுக்கொண்டார். 

 

சார்ந்த செய்திகள்