Skip to main content

ஓடும் படகில் மாணவர்கள் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

d

 

சிதம்பரம் அருகே டி எஸ் பேட்டை கிராமத்தில் வசிக்கும் மாணவர் அதியமான் வயது 12. இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். அதேபோல் ஆதி ஸ்ரீ வயது 10,  5  வகுப்பு பயின்று வருகின்றனர். இவர்கள் சிறு வயது முதல் சிலம்ப பயிற்சி கற்று வருகின்றனர்.

 

இந்நிலையில் தமிழக முதல்வர் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் மாணவர்கள் இருவரும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டி எஸ் பேட்டையை ஒட்டியுள்ள சேற்றுக் கொள்ளிடம் ஆற்றில், ஓடும் படகில் 2 மணி நேரம் 10 நிமிடம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இது அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்கள் மற்றும் மீனவர்களைக் கவர்ந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிலம்பத்தில் புதிய உலக சாதனை நிகழ்த்திய மாணவர்கள்

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

New World Record in silambam

 

சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கலை இளமணி மோ.பி.சுகித்தா புதிய உலக சாதனை படைத்தார். அவருடன் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் அவர்களின் மகன்கள் மித்ரன் மற்றும் பிரஜன் ஆகியோர் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். இந்த மூவரின் சாதனைகள் துபாயில் இயங்கி வரும் ஐன்ஸ்டன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த உலக சாதனையை துபாயில் இருந்து வருகை புரிந்த ஐன்ஸ்டன் புத்தக இயக்குனர் கார்த்திக்குமார் மற்றும் நிர்வாக இயக்குனர் மோனிகா ரோஷினி ஆகியோர் ஆய்வு செய்து உலக சாதனை சான்றிதழை வழங்கினார்கள்.

 

மேலும் அமெரிக்க உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற 280க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் சுழற்சி முறையில் ஒரு குழுவிற்கு 40 பேர் என 7 குழுவாக ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்கள். இந்த சாதனையானது அமெரிக்காவில் இயங்கி வரும் அமெரிக்க உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. நிகழ்ச்சிக்கு உலக சிலம்ப இளையோர் சம்மேளன இந்திய தலைவர் டாக்டர். வி.ஜே.செந்தில்குமார்  தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் கலந்து கொண்டு சாதனை சான்றிதழை வழங்கினார். 

 

New World Record in silambam

 

மேலும் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன ஸ்ரீமத் சுவாமி கங்காதரானந்தா, கொடைக்கானல் விவேகானந்தா வித்யாலயா பள்ளி செயலர் சாதனை மாணவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கினார்கள். முன்னதாக இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஆர்.கிருஷ்ணன், டாக்டர்.கவிதா செந்தில் மற்றும் பத்மஸ்ரீ தாமோதரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் உலக சிலம்ப இளையோர் சம்மேளன தலைவர் ஆர்.மோகன், துணைத் தலைவர் வரகனேரி என்.கே.ரவிச்சந்திரன், மாணிக்கம், மணிகண்டன், ராஜ்குமார் மற்றும் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இச்சாதனை நிகழ்ச்சியை உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் மற்றும் மன்னை மகாலிங்கம் சிலம்ப சங்கம் இணைந்து செய்திருந்தனர்.

 

 

Next Story

சிலம்பாட்ட சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று (15.04.2023) இன்று காலை 10 மணியளவில் உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கம் சார்பில் சிலம்ப வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிலம்பாட்ட ஆசிரியர்கள் மற்றும் சிலம்பம் கற்றுக் கொள்ளும் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.