Skip to main content

ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மனைவியும் மாணவியும் பேசும் ஆடியோ! போலீஸ் விசாரிக்க முடிவு! 

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

Audio of teacher Mithun Chakraverty's wife and student talking! Police decide to investigate!

 

கோவையில் பாலியல் தொல்லையால் உயிரிழந்த மாணவியுடன், அவரது இறப்புக்கு முன்னதாக ஆசிரியரின் மனைவி பேசிய ஆடியோ பதிவு தற்போது பரவிவருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

 

கோவையைச் சேர்ந்த 17 வயது மாணவி, தனியார் பள்ளி ஆசிரியர் அளித்தப் பாலியல் தொல்லை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியின் மனைவியும் அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இந்நிலையில், மிதுன் சக்ரவர்த்தியின் பாலியல் அத்துமீறல்கள் குறித்து அறிந்த அவர், மாணவியிடம் பேசிய ஆடியோ பதிவு தற்போது வைரலாகப் பரவிவருகிறது. அதில் மிதுன் சக்ரவர்த்தியின் மனைவி, “மிதுன் சக்ரவர்த்திக்கு ஏன் தொடா்ந்து குறுஞ்செய்தி அனுப்பினாய்? உன் பெற்றோரை அழைத்துக்கொண்டு வா, பள்ளி முதல்வரிடம் இதுகுறித்து பேசுவோம். எல்லா விவரங்களையும் உனது பெற்றோரிடம் கூறிவிட்டாயா” என பல கேள்விகளைக் கேட்கிறார். இதில் உயிரிழந்த மாணவி, தான் பாலியல் ரீதியாக மிதுன் சக்ரவர்த்தியால் துன்புறுத்தப்பட்டது குறித்து தெரிவித்து அழுகிறார். இந்த ஆடியோ கடந்த சில நாட்களாக வைரலாகப் பரவிவருகிறது.

 

பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள இந்த வழக்கில் பல கோணங்களில் விசாரித்துவரும் போலீசார், இந்த ஆடியோ விவகாரத்தை அலட்சியமாகக் கையாண்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆடியோ குறித்து மிதுன் சக்ரவர்த்தியின் மனைவியிடம் விசாரிக்க உள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.