Skip to main content

மது அருந்திவிட்டு வகுப்புக்கு சென்ற மாணவர்கள்...நூதன தண்டனையை வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை!

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

மது அருந்திவிட்டு வகுப்புகளுக்கு சென்ற மாணவர்களுக்கு நூதன தண்டனை அளித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை. அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரி மாணவர்கள் 8 பேர் மது அருந்திவிட்டு வகுப்புக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம், அந்த மாணவர்களை வகுப்புக்குள் அனுமதிக்காமல் கல்லூரி நிர்வாகம் சம்மந்தப்பட்ட மாணவர்களை நீக்கியது. மேலும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு தொடர மாணவர்களை கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

 

அதன் காரணமாக மாணவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மது அருந்திவிட்டு வகுப்புக்கு சென்ற மாணவர்களுக்கு நூதன தண்டனையை வழங்கி தீர்ப்பளித்தனர். அதன்படி விருதுநகர் காமராஜர் நினைவு இல்லத்தை கல்லூரி மாணவர்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை சுத்தம் செய்ய வேண்டும்.

 

aruppukkottai college students drinking alcohol madurai high court order

 

அதன் பிறகு மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை மது விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொள்ள வேண்டும். மேலும் காமராஜர் நினைவு இல்லத்திற்கு வரும் பார்வையளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவர்களின் செயல்பாடுகளை விருதுநகர் டவுன் காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

 

மேலும் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர்களை மூன்றாம் ஆண்டுக்கான கல்வி கட்டணத்தை பெற்று மீண்டும் கல்லூரியில் சேர்க்கவும் நீதிபதிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். அதேபோல் உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்து ஆகஸ்ட் 19- ஆம் தேதி கல்லூரி முதல்வர், மனுதாரரகள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.