Skip to main content

#metooவில் அர்ஜூன் அதிரடி -  5 கோடி இழப்பீடு கேட்டு நடிகை மீது மானநஷ்ட வழக்கு

Published on 26/10/2018 | Edited on 26/10/2018
ar


மீடூ விவகாரம் தமிழ்சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நடிகர் அர்ஜூன் மீது புகார் கூறியுள்ளார் சுருதி ஹரிகரன்.  தன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் அர்ஜூன்.  5 கோடி இழப்பீடு தரவேண்டும் என்று வழக்கில் கோரியுள்ளார்.

 

 நிபுணன்!  இது நடிகர் அர்ஜூன் நடித்த 150வது திரைப்படம்.   இப்படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்தது.  இந்நிலையில், இப்படத்தில் நடித்த கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன், நிபுணன் படப்பிடிப்பின்போது அர்ஜூன் தனக்கு பாலியல் துன்புறுத்தல் தந்ததாக, அதாவது தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக மீடூவில் கூறினார்.

 

“நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை. ஸ்ருதி ஹரிகரன் புகாருக்கு பின்னால், வேறு யாரோ இருக்கிறார்கள்” என்று தனது முகநூல் பக்கத்தில் அர்ஜூன் மறுப்பு தெரிவித்திருந்தார்.

 

இதையடுத்து நிபுணன் படத்தின் இயக்குநர் அருண் வைத்தியநாதன் இந்த விவகாரம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார். அதில், ’அர்ஜுன் சார், ஸ்ருதி ஹரிஹரன் இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள். எனக்கு அவர்கள் குடும்பங்களையும் நன்றாகத் தெரியும். அர்ஜுன் சாரைப் பொருத்தவரையில், அவர் ஷூட்டிங்கில் ஒரு ஜென்டில்மேன். நடிப்புக் கலையில் சிறந்த தொழில் நுணுக்கம் அறிந்தவர். ஸ்ருதியும் அப்படியே. அர்ஜுன் சார் மீது ஸ்ருதி கூறியிருக்கும் மீ டூ குற்றச்சாட்டு குறித்து அறிந்து அதிர்ச்சியட்டைந்தேன்.  

 

ar

 

ஸ்ருதி குறிப்பிட்டுள்ள குறிப்பிட்ட காட்சி ஒரு நெருக்கமான ரொமாண்டிக் காட்சி. அதற்கு ரிஹர்சல் பார்த்து, அது குறித்து விவாதித்தோம் பின்னர் அந்த காட்சியை படமாக்கினோம். பொதுவாக ஷூட்டிங் ஸ்பாட்டில் சில காட்சிகளை இம்ப்ரொவைஸ் பண்ணுவது வழக்கம் தான். அதன்படியே இந்த காட்சியும் எடுக்கப்பட்டது. ஸ்ருதி கூறிய இச்சம்பவம் 2 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்பதால் எனக்கு சரியாக நினைவில் இல்லை.  அந்த ரொமாண்டிக் காட்சி, எடுக்கப்பட்டதை விட,  எழுதப்படும்போது இன்னும் அன்னியோன்னியமாக எழுதப்பட்டிருந்தது. அர்ஜுன் சார் அதை ஸ்க்ரிப்டிலேயே குறைக்கச் சொன்னார். 'எனக்கு டீனேஜ் மகள்கள் இருக்கிறார்கள். நான் இனிமேலும் அப்படியான காட்சிகளில் நடிக்க முடியாது' என்றார். அதைப் புரிந்துகொண்டு மாற்றி அமைத்தேன்’’என்று தெரிவித்திருந்தார்.

 

மேலும் இருவருக்கும், ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு நடிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் அர்ஜூன் தனது திரையுலக வாழ்வில் இதுவரை சேர்த்து வைத்துள்ள பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் விளைவிக்கும் வகையில் ஸ்ருதிஹரிகரன் குற்றம்சாட்டியுள்ளார் என்று அவருக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.  5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் வழக்கின் மனுவில் கோரியுள்ளார். 

 

அர்ஜூன் தொடுத்துள்ள இந்த வழக்கை தான் எதிர்கொள்ளத் தயார் என்றும் ஸ்ருதிஹரிகரன் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனது குடும்பத்தில் மோடி என்றால் ரொம்பப் பிடிக்கும்” - அர்ஜுன் 

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
arjun about modi

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். அதன்படி, நேற்று மாலை சென்னையில் நடந்த கேலோ விளையாட்டு போட்டி துவக்க விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இதனையடுத்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்தார். அப்போது அவரை மரியாதை நிமித்தமாக தனது குடும்பத்துடன் சந்தித்துள்ளார் நடிகர் அர்ஜுன். 

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய கோவிலுக்கு அவரை அழைத்திருக்கிறேன். விரைவில் வருவதாக சொல்லியிருக்கிறார். நான் பிஜேபியில் இணையவில்லை. முதலில் அரசியல் நமக்கு தெரியாது. முதல் தடவை அவரை சந்திக்கிறேன். எனக்கு பிடித்த ஒரு ஆளுமை. எனது குடும்பத்திலும் மோடி என்றால் ரொம்பப் பிடிக்கும்” என்றார். சென்னை கெருகம்பாக்கதில் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

‘விடாமுயற்சி’ - ஏ.கே. க்ளிக்ஸ்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023

 

 

 

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் கமிட்டாகியுள்ளதாகத் தகவல் வெளியானது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது.

அங்கு நடந்த படப்பிடிப்பின்போது படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இது பலருக்கும் அதிர்ச்சியளித்தது. இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.

இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அண்மையில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கியது. இப்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் ஆரவ், அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளது உறுதியாகிவிட்டது. அஜித்துடன் இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் அர்ஜுன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, இந்தப் புகைப்படத்தை எடுத்தவர் யார் என்று யூகியுங்கள்? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தப் பதிவிற்கு கீழ் அனைவரும் அஜித் என கமெண்ட் செய்திருந்தனர். 

இந்த நிலையில் படக்குழுவை அஜித் எடுத்த புகைப்படங்களை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் அர்ஜுன் நேற்று பகிர்ந்திருந்த புகைப்படம், இயக்குநர் மகிழ் திருமேனியின் புகைப்படம், ரெஜினா கெஸாண்ட்ராவின் புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இப்படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா கமிட் செய்யப்பட்டார். முதற்கட்ட படப்பிடிப்பும் அவர்தான் பணியாற்றினார். ஆனால் அண்மையில் திடீரென்று ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் விடாமுயற்சி படத்தில் பணியாற்றி வருவதாகத் தகவல் வெளியானது. அது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.