Skip to main content

கடலூர் மாவட்டத்திற்கு பனை விதைகளை வழங்கிய அரியலூர் மாவட்ட தன்னார்வலர்கள்… 

Published on 05/09/2020 | Edited on 05/09/2020

 

Ariyalur District Volunteers Donate Palm Seeds to Cuddalore District

 

 

அரியலூர் மாவட்ட இளைஞர்கள் பலர் தங்களை இயற்கையை மீட்டெடுக்கும் பணியில் அர்ப்பணித்து வருகிறார்கள். இந்நிலையில் கடலூர் மாவட்ட தன்னார்வலர்களுக்கு அரியலூர் மாவட்ட தன்னார்வலர்கள் 5 ஆயிரம் பனை விதைகள் விலையில்லாமல் கொடுத்தது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

அரியலூர் மாவட்டம் விகைகாட்டி அருகில் உள்ள நெருஞ்சிக்கோரை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் இணைந்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் வழியில் பல்வேறு இயற்கை மீட்டெடுப்பு பணிகளை பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட இளைஞர்கள் சிலர் நெருஞ்சிக்கோரை கிராம இளைஞர்களை தொடர்பு கொண்டு தங்களது கிராமத்தில் உள்ள நீர்நிலைகளைச் சுற்றி பனை விதைகள் விதைக்க வேண்டும் உதவிடுங்கள் என கேட்டவுடன், கடந்த சில நாட்களாக 5 ஆயிரம் பனை விதைகளை சேகரித்து (விலையில்லாமல்) ஒரு பைசா கூட வாங்காமல் கடலூர் மாவட்ட இளைஞர்களுக்கு வழங்கியுள்ளனர். 

 

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி இயற்கை வள்ளல்களை போற்றுவோம் என்றும் இவர்கள் அரியலூர் மாவட்டத்தின் பெருமைக்குரியவர்கள் இயற்கையை போற்றுவதற்காக தன்னலம் கருதாது அன்றாடம் அயராது உழைத்து வரும் இளைஞர்கள் கூட்டம் நெருஞ்சிக்கோரை கிராமத்தின் ஸ்வீட் தொண்டு சேவை உள்ளங்கள்! தொடரட்டும் உமது சேவை என்றும் பதிவிட்டுள்ளனர் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.