Skip to main content

மகளிர் கல்லூரியில் தொல்லியல் ஆய்வு மன்றம் தொடக்கம்!

Published on 01/01/2022 | Edited on 01/01/2022

 

Archaeological Survey of Women College begins!

 

தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, வரலாறு, தொல்லியல் கல்லூரி மாணவிகள் அறிந்துகொள்ளவும், தொல்லியல்துறை சார்ந்த அறிவை வளப்படுத்தவும், பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை அவர்களிடம் ஏற்படுத்தவும் மதுரை நா.ம.ச.சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியின் தமிழ் மற்றும் வரலாற்றுத்துறை இணைந்து கல்லூரியில் “தொல்லியல் ஆய்வு மன்றம்” தொடங்கப்பட்டது.

 

இந்நிகழ்வுக்குக் கல்லூரித் தலைவர் மாரீஸ்குமார் தலைமை வகித்தார்.  தமிழ்த் துறைத் தலைவர் பாண்டிச்செல்வி அனைவரையும் வரவேற்றார். கல்லூரிச் செயலாளர் கரிக்கோல்ராஜ், கல்லூரித் தாளாளர் ஜெயக்குமார், கல்லூரிப் பொருளாளர் நல்லதம்பி, கல்லுாரி முதல்வர் கார்த்திகா ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, “தமிழகம் முழுவதும் விரிவாக நடந்து வரும் அகழாய்வுகளில் வெளிப்பட்டு வரும் தொன்மைச் சான்றுகள் காரணமாக கல்லூரி மாணவ மாணவியர்களிடம் தொல்லியலைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் தற்போது அதிகரித்து வருகிறது. மாணவிகள் தங்கள் பகுதிகளில் உள்ள நமது பண்பாடு, மருத்துவம், கல்வெட்டுகள், பாரம்பரியச் சின்னங்கள், நாட்டார் வழக்காற்றியல், வாய்மொழி வரலாறு, போன்றவற்றை ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டும்” என்றார்.

 

யானைமலை தமிழி கல்வெட்டு பற்றி ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லூரி மாணவி வே.சிவரஞ்சனி பேசினார். வரலாற்றுத் துறைத் தலைவர் பாண்டீஸ்வரி நன்றியுரை ஆற்றினார். தொடர்ந்து கல்லூரியில் தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்க இருப்பதாகக் கல்லூரி முதல்வர் கார்த்திகா ராணி தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

சென்னையில் பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
chennai mit college issue

சென்னை குரோம்பேட்டையில் எம்.ஐ.டி. (M.I.T.) என்ற பெயரில் பிரபல பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் கல்லூரிக்கு இன்று (06.03.2024) மாலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் சென்னை காவல்துறையின் சார்பில் மோப்ப நாயை கொண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர். பிரபல கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாகச் சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், இன்று காலை சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வெடிக்கும் என பெங்களூரு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.