Skip to main content

அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

Published on 22/08/2022 | Edited on 22/08/2022

 

Annamalai University Vice Chancellor Lifetime Achievement Award

 


அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

 

கர்நாடக மாநிலம் பெங்களூரில் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் அகில இந்திய விவசாய மாணவர் சங்கம் இணைந்து நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய வேளாண்மை மற்றும் உணவு முறையின் முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சர்வதேச அளவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

மாநாட்டில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம.கதிரேசனுக்கு விவசாய மேம்பாட்டிற்காகவும் விவசாயிகள், விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களுடன் வலுவான தொடர்பை ஏற்படுத்துவதில் சிறந்த பங்களிப்பு களிப்பு செய்துள்ளதைப் பாராட்டும் விதமாக “வாழ்நாள் சாதனையாளர் 2021” விருது வழங்கப்பட்டது. மேலும் " துணைவேந்தர் 100 க்கும் மேற்பட்ட முதுகலை வேளாண் வகுப்புகளுக்கு கற்பித்துள்ளார் எனவும், வேளாண் ஆராய்ச்சி மாணவர்களுக்காக ரூ 1.29 கோடி மற்றும் வேளாண் இளங்கலை முதுகலை மாணவர்களுக்காக ரூ 16.70 லட்சம் ஆராய்ச்சி திட்டத்தின் மூலம் பெற்றுத் தந்துள்ளார்.

 

மாணவிகளை என்.சி.சி.யில் சேர ஊக்குவித்து, என்.சி.சி.யில் மாணவிகளுக்கெனத் தனிப் பிரிவைத் தொடங்கினார். அவரது வேளாண் ஆராய்ச்சிப் பணிகள் 1,230 விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவியுள்ளது என்றும் விவசாய தொழில்நுட்ப பரிமாற்றத்தின் மூலம் 2400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைகின்றனர்" என்றும் மாநாட்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விருது வென்ற  'ஐயோ சாமி...’ பாடல் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
ayyo sami gets edison award

அண்மையில் நடைபெற்ற 16வது எடிசன் திரைப்பட விருது விழாவில்  கவிஞர் பொத்துவில் அஸ்மினின்
 'ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்' சிறந்த உணர்ச்சி பூர்வமான பாடல் (Best Sensational Song -2023) விருதினைப் பெற்றுள்ளது. 'நான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'தப்பெல்லாம் தப்பே இல்லை' பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் இப்பாடலை எழுதியுள்ளார். 

பாடலை பிரபல இலங்கை இசையமைப்பாளர் சனுக்க இசையமைக்க இலங்கையை சேர்ந்த பிரபல பாடகி விண்டி பாடியுள்ளார். இலங்கையில் அதிக பார்வைகளை ஈர்த்த முதல் இலங்கை தமிழ் பாடல் என்ற பெருமையை இப்பாடல் பெற்றுள்ளது. இவ்விருதினை பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், இசையமைப்பாளர் சனுக்க, பாடகி விண்டி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இயக்குநர் மனோஜ் பாரதிராஜா, சென்னைக்கான ஆஸ்திரேலியா கவுன்சிலர் டேவிட் ஆகியோர் விருதை வழங்கினர்.
 

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது.