Skip to main content

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் நள்ளிரவில் போராட்டம்

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

Annamalai University students struggle at midnight

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மேலாண்மை துறை இறுதி ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் கல்வி சுற்றுலா செல்வது வழக்கம் இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான இறுதி ஆண்டு மாணவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக கல்வி சுற்றுலாவிற்கு சம்பந்தப்பட்ட துறை தலைவரிடம் அனுமதி கூறியுள்ளனர் துறை தலைவர்  நான்கு முறைக்கு மேல் அனுமதி மறுக்கப்பட்டு இறுதியாக அனுமதி வழங்கியுள்ளார். 

 

இந்த நிலையில் ஏப்ரல் 26 ஆம் தேதி இரவு கல்வி சுற்றுலாவிற்கு அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் மேலாண்மை துறை மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பெற்றோருடன் உடைமைகளை எடுத்து வந்து பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது மேலாண்மை துறை தலைவர் உதயசூரியன் மற்றும் முதல்வர் விஜயராணி ஆகியோர் மாணவர்களிடம் கல்வி சுற்றுலாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என கூறியதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து  பல்கலைக்கழக வளாகத்தில் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலாண்மை துறை மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலா ரத்து செய்யப்பட்டதால் இரவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பாக இருந்தது.

 

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையிலான காவல்துறையினர் மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதனை தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் வியாழக்கிழமை அனைத்து மாணவர்களின் அழைத்து கருத்து கேட்டு வெள்ளிக்கிழமை இரவு கண்டிப்பாக கல்வி சுற்றுலாவுக்கு அனுமதி அளிப்பதாக உறுதி அளித்தார். இன்றைக்கு வந்து அனைத்து மாணவர் மாணவிகளும் பல்கலைக்கழக விடுதியில் தங்க வைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். நள்ளிரவு 2 மணி வரை இந்த பிரச்சனை தொடர்ந்து நடந்ததால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பாக இருந்தது.

 

இது குறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், மேலாண்மை துறைத் தலைவராக உள்ளவர் உதயசூரியன். இவர் மாணவர்கள் கல்வி சுற்றுலாவிற்கு அனுமதி அளிக்காமல் நான்கு முறை கடந்த 3 மாதங்களாக அனுமதியை ரத்து செய்துள்ளார். இது குறித்து மேலாண்மைத் துறை முதல்வரிடம் மாணவ, மாணவிகள் துறைத்தலைவர் செய்யும் சில தவறான செயல்பாடுகளையும் அவர் ஏன் கல்வி சுற்றுலாவை ரத்து செய்கிறார் என்பதை புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் துறை முதல்வர் விஜயராணி துறைத் தலைவரை அழைத்து கேட்டுள்ளார். இதனைதொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு முதல்வர் கல்வி சுற்றுலா செல்வதற்கு அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் துறைத் தலைவரைத் தாண்டி எப்படி முதல்வர் அனுமதிக்கலாம் என்ற கோபத்தில் அவர் தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் துணை வேந்தர் இடம் அனுமதி வாங்குவதில் தாமதப்படுத்தி கல்வி சுற்றுலாவிற்கு அனுமதி கிடைக்காமல் செய்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் துறைத் தலைவர் வாட்ஸ் அப் குரூப்பில் பணம் கட்டாத மாணவர்கள் பல பேர் உள்ளதாக பதிவு செய்துள்ளார் அதனால் கல்வி சுற்றுலாவுக்கு செல்ல அனுமதி இல்லை என குறிப்பிட்டுள்ளார். இதில் அதிக அளவு ஸ்காலர்ஷிப் பெரும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் பணம் கட்டவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு மாணவர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கல்வி சுற்றுலாவின் போது மாணவர்களின் ஸ்காலர்ஷிப்பில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்வார்கள் ஆனால் இந்த ஆண்டு ஸ்காலர்ஷிப் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே கட்சி நிர்வாகி வீட்டின் கழிவறையில் ரூ.1லட்சம் பறிமுதல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
IJK party executive house toilet Rs 1 lakh seized

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகி வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் துண்டறிக்கைகளை  தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (17.4.2024) இரவு பறிமுதல் செய்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி வேட்பாளராக இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.இந்நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சூசையப்பர் மகன் வினோத் சந்திரன்  ஐஜேகே கட்சியின் கிளைச் செயலாளராக உள்ளார். இவர் அந்தப் பகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து லால்குடி வட்டாட்சியர் உத்தரவின் பெயரில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செழியன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அதில், வினோத் சந்திரன் வீட்டின் பின்புறம் உள்ள கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம், பணம் விநியோகிக்கக்கூடிய பெயர் பட்டியல் மற்றும் டாக்டர் பாரிவேந்தரின் பாராளுமன்றத் தொகுதி பணிகள் என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட 500 புத்தகங்கள் 100 துண்டு பிரசுரங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்தும் வினோத் சந்திரனிடம் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தன்னுடையது இல்லை என கூறியதை அடுத்து பறிமுதல் செய்த பணத்தினை பறக்கும் படை அலுவலர் செழியன் லால்குடி வருவாய் வட்டாட்சியர் முருகனிடம் ஒப்படைத்தார். அவர் பணத்தை லால்குடி கருவூலத்தில் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தார்.

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.