Skip to main content

விண்ணில் ஏவப்பட்ட ‘அனிதா சாட்!’ - திருச்சி மாணவியின் சாதனை

Published on 07/05/2018 | Edited on 07/05/2018
trichy

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி குமரேசபுரத்தை சேர்ந்த ஆல்பர்ட் குமார்- சசிகலா தம்பதியின் மகள் வில்லட் ஓவியா. இவர் திருச்சி பெல் வளாகத்தில் உள்ள ஆர்.எஸ்.கே. மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகிறார்.

 

கடந்த 3 ஆண்டுகளாக தொடந்து ஆய்வு முயற்சியில் வளி மண்டலத்தில் கலந்துள்ள மாசு மற்றும் வெப்பமயமாதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில், குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோள் ஒன்றை வில்லட் ஓவியா உருவாக்கினார்.

 

மருத்துவக் கல்வியில் கடந்த ஆண்டு திணிக்கப்பட்ட நீட் தேர்வின் கொடுமையால் தன் உயிரை மாய்த்துக் கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் நினைவாக, தான் கண்டறிந்துள்ள செயற்கை கோளுக்கு ‘அனிதா சாட்’ என்ற பெயரினை மாணவி வில்லட் ஓவியா சூட்டியுள்ளார்.

 

500 கிராம் எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் மெக்சிகோ நாட்டில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்று இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

 

anitha chat

 

இதுபற்றி மாணவி வில்லட் ஓவியா பேசும் போது…

’’எனது பள்ளி படிப்புக்கு இடையே 3 ஆண்டுகள் உழைத்து இந்த செயற்கை கோளை உருவாக்கினேன். இந்த செயற்கைகோளில் வளி மண்டலத்தில் கலந்துள்ள கார்பன் மோனாக்சைடு, கார்பன்டை ஆக்சைடு, ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றின் அளவை கண்டறிவதற்கு தேவையான சென்சார் கருவிகள் உள்ளன. மேலும் அது பயணிக்கும் இடங்களை படம் பிடிக்க சிறிய கேமரா, செயற்கைகோளின் இருப்பிடத்தை கண்டறிய ஜி.பி.எஸ். கருவி ஆகியவற்றையும் பொருத்தியுள்ளேன். செல்போன் மூலமாகவே இதை கட்டுப்படுத்தலாம்.

 

மேலும் அது அளிக்கும் தகவல்களை சேகரிக்கவும், அது அனுப்பும் படங்களை பார்க்கவும் முடியும். இது ஏறத்தாழ கடல் மட்டத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கவிடப்படும்.

 

15 செ.மீ. கியூப் வடிவத்தில் சுமார் 500 கிராம் எடை கொண்ட இந்த செயற்கைக் கோள் ஒரு கேப்சூல் எனப்படும் விண்ணுக்கு எடுத்து செல்ல உதவும் கருவியில் வைக்கப்பட்டு ஹீலியம் பலூன் மூலம் மெக்சிகோவில் இருந்து வளிமண்டலத்தில் ஏவப்பட்டது. 

 

மருத்துவர் ஆகும் கனவுடன் நீட் தேர்வை எழுதி அதில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து தனது உயிரை நீத்த அனிதாவின் நினைவாக செயற்கைகோளுக்கு அனிதா சாட் என பெயர் வைத்துள்ளேன்.’’ என்று பெருமை பொங்க கூறினார். 

 

மாணவியின் செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகளை மெக்சிகோ ஹார்வர்டு ஸ்பேஸ் நிறுவனம் செய்துள்ளது.

 

இதற்கிடையே திருச்சியில் நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் வில்லட் ஓவியா பங்கேற்று எழுதினார். வில்லட் ஓவியாவின் தந்தை ஆல்பர்ட் குமார் மும்பையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தாய் சசிகலா மற்றும் ஒரு தங்கை உள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவியிடம் பேசிய கல்லூரி மாணவன் மீது தாக்குதல்;  போலீஸ் விசாரணை

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
beaten on college student who spoke to girl student

திருச்சி வயலூர் ரோடு ஜின்னா தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது கர்சத் (வயது 20). இவர் கேகே நகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் தனது நண்பர் ராகுல் என்பவருடன் திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்துக்கு சென்றார். அங்கே பயிற்சிக்கு வந்த மேரி என்ற மாணவியுடன் முகமது கர்சத் பேசியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த இன்னொரு மாணவர் எதற்காக அந்த மாணவியிடம் பேசுகிறாய் என்று தகராறு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவர் முகமது கர்சத்தை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி சஞ்சய் மற்றும் சிலர் சேர்ந்து அவரை கல் மற்றும் கையால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து முகமது கர்சத் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

உ.பி.யில் பரபரப்பு; ஆஸ்கர் விருது பெற்ற சிறுமியின் வீடு இடிப்பு

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

Oscar winner Pinki house demolished

 

உத்தரப்பிரதேசத்தில் ஆஸ்கர் விருது பெற்ற சிறுமி பிங்கியின் வீடு இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திரப்பிரதேசம், மிர்சாபூர் மாவட்டத்தில், ராம்பூர் தாபி கிராமத்தில் வசித்து வந்தவர் சிறுமி பிங்கி குமாரி சோன்கர். இவருக்கு உதட்டில் பிளவு(Cleft lip) இருந்துள்ளது. அதற்கான சிகிச்சையை சில சமூக ஆர்வலர்களின் உதவியுடன் சிறுமிக்கு சரிசெய்து கொண்டார். இதனை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஸ்மைல் பிங்கி’ என்ற குறும்படம் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆவணப்(குறும்) படத்திற்கான ஆஸ்கர் விருதினை பெற்றது. இதனைத் தொடர்ந்து உலகத்தின் பார்வை பிங்கியின் கிராமத்தின் பக்கம் திரும்பியது. 

 

அந்த சமயத்தில் மிர்சாபூர் மாவட்ட நிர்வாக சார்பில் வீடு கட்டிக்கொள்ள இடம் கொடுக்கப்பட்டு பிங்கியின் குடும்பத்தினர் வீடுகட்டி வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி வனத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு என்று கூறி பிங்கியின் வீட்டோடு சேர்த்து அந்த கிராமத்தில் உள்ள 30 வீடுகளையும் காலி செய்யுமாறு அறிக்கை வெளியிட்டனர். 

 

இது குறித்து பிங்கியின் தந்தை ராஜேந்திர சோன்கர்  கூறுகையில், “நாங்கள் வீடு கட்டும் பொழுது இந்த நிலம் வனத்துறையினருக்கு சொந்தமானது எனக் கூறவில்லை. அந்த கிராமத்தில் 70 வது வருடங்களாக எந்த தடையும் இன்றி வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர்” என்றார். அவரது வழக்கறிஞர் பேசுகையில், “வனத்துறையினர் தான் பிங்கியின் வீட்டிற்கு அடிக்கல்லை நாட்டினர். ஆனால் இன்று அவர்களே இதனை ஆக்கிரமிப்பு என சொல்கின்றனர்” என்றார். “இந்த விவகாரத்தில் யாருக்கும் பிரச்சனை ஏற்படாமல் நியாயமான முறையில் தீர்க்கப்படும்” என மிர்சாபூர் மாவட்ட மாஜிஸ்திரேட் பிரியங்கா நிரஞ்சன்  தெரிவித்திருக்கிறார்.