Skip to main content

திறந்தவெளி கிணறு அருகே அங்கன்வாடி மையம்; உயிர் பயத்தில் குழந்தைகள்!

Published on 30/11/2019 | Edited on 30/11/2019

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், சீவல்சரகு ஊராட்சி, ஜெ.புதுக்கோட்டையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2018-19 நிதி மூலம் சுமார் 8.70 இலட்சம் அளவில் புதியஅங்கன்வாடி மையம் கட்டிக் கொடுக்கப்பட்டது. அங்கன்வாடி மையம் அருகே பழமையான திறந்தவெளி கிணறு உள்ளது. அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகள் கிணறு அருகே அடிக்கடி சென்றதால் ஊர் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப மறுத்ததால் தற்போது அங்கன்வாடி மையம் அருகில் உள்ள மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக நடத்தப்படும் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

 

Anganwadi Center near open well


முறையான கழிப்பிட வசதி இல்லாமல் குழந்தைகள் அவதிப்படுகின்றனர். அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டும், அருகில் திறந்தவெளி கிணறு இருப்பதால் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் பூட்டியே கிடக்கிறது. இதுகுறித்து ஜெ.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், மணப்பாறை அருகே திறந்தவெளி ஆழ்துளைக்கிணற்றில் சுர்ஜித் தவறி விழுந்து இறந்ததை அடுத்து நாங்கள் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப மறுத்துவிட்டோம். காரணம் அங்கன்வாடி மையத்திற்கு 10அடி தூரத்தில் திறந்தவெளி கிணறு உள்ளது. பிறகு எப்படி நாங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புவோம் என்றனர்.

 

Anganwadi Center near open well

 

அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகள் வராததை அடுத்து அங்கன்வாடி மைய பணியாளர்கள் அருகே உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் தற்காலிகமாக அங்கன்வாடி மையத்தை மாற்றி உள்ளனர். எத்தனை குழந்தைகள் இருந்தாலும் பரவாயில்லை என்ற நோக்கத்தோடு சீவல்சரகு ஊராட்சி நிர்வாகமும். ஆத்தூர் ஒன்றியமும் செயல்படுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். மாவட்ட ஆட்சியர் தனிக்கவனம் செலுத்தி சீவல்சரகு ஊராட்சி ஜெ.புதுக்கோட்டையில் அங்கன்வாடி மையம் அருகே உள்ள திறந்தவெளி கிணற்றுக்கு இரும்புமூடி போட உத்தரவிட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.