Skip to main content

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை தூக்கி வீசிய அமமுகவினர்

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

AMMK relief materials affected people has come under criticism

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அமமுகவினர் தூக்கிவீசிய நிகழ்வு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 

 

தமிழ்நாட்டில், கடந்த நவம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான சீர்காழி, கொள்ளிடம், செம்பனார்கோயில் உள்ளிட்ட கிராம பகுதிகளில், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், நீரில் மூழ்கி சேதமடைந்தன.

 

இதனையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  அப்பராஜபுரம்புத்தூர் கிராமத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பார்வையிட்டார். பின்னர், கிராம மக்களை சந்திக்க வந்த டி.டி.வி. தினகரனிடம், மழையால் சேதமடைந்த பயிர்களை காண்பித்து, விவசாயிகள் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.

 

AMMK relief materials affected people has come under criticism

 

இதையடுத்து, அங்கு கூடியிருந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் என 200 பேருக்கு, 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி மற்றும் போர்வை ஆகியவற்றை வழங்கிய டிடிவி தினகரன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து ஆறுதல் தெரிவித்தார்.

 

சிறிது நேரம் கழித்து, சீர்காழியில் பாதிக்கப்பட்ட மக்களை காண்பதற்காக, டி.டி.வி. தினகரன் சென்றுவிட்டார். பின்னர், அமமுக கட்சி நிர்வாகிகள் வைத்திருந்த நிவாரண பொருட்களை வாங்குவதற்காக, பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு முன்னேறியதால், அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், கூட்டம் கட்டுக்கடங்காததால், என்ன செய்வது என திகைத்து நின்ற அமமுக கட்சி நிர்வாகிகள், நிவாரண பொருட்களை பொதுமக்களிடம் தூக்கி வீசினர். அப்போது, அமமுகவினர் தூக்கி வீசிய பொருட்களை பிடிப்பதற்காக பொதுமக்கள் முண்டியடித்த போது, கூட்ட நெரிசலில் சிக்கிய ஒரு சிலர், திடீரென மயக்கம் அடைந்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள், பார்ப்போருக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.