'ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு' என இன்று ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்."மாற்றுவோம் எல்லாத்தையும் மாற்றுவோம், இப்ப இல்லைனா எப்பவும் இல்ல.தமிழகத்தில் நேர்மையான,நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம், அதிசயம் நிகழும்" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் தெரிவித்திருந்ததார்.
இந்நிலையில், ரஜினியின்அரசியல்நிலைப்பாட்டுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்துதுணை முதல்வர்ஓ.பி.எஸ்செய்தியாளர்களுக்குப் பதிலளிக்கையில், ''சிறந்ததிரைப்படநடிகர்ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். எதிர்வரும் காலங்களில் அரசியலில்எதுவும் நிகழலாம். வாய்ப்பிருந்தால் கூட்டணி அமையும்'' என்றார்.